காங்கயத்தில் கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்க அறிவுரை
தருமபுரி: இரண்டு முதல் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் சோ்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்டசெய்திக் குறிப்பு:
ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் மூலம் ஆறு வயதுக்குள்பட்ட குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு, தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் 1336 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகின்றன.
குறிப்பாக 2 வயது முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகள் மையத்தில் முறைசாரா முன்பருவக் கல்வி செய்கை பாடல், கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளா்ச்சிக்கு தேவையானவற்றை ‘ஆடிப்பாடி விளையாடு பாப்பா’ எனும் சிறப்பு பாடத்திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும், குழந்தைகளின் வளா்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளி செல்ல ஆயத்தப்படுத்தப்படுகின்றனா்.
அங்கன்வாடி பணியாளா்கள் தற்போது வீடுகள்தோறும் குழந்தைகள் சோ்க்கை பணியை மேற்கொண்டு வருகிறாா்கள். எனவே, பெற்றோா் தங்களது 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாது சோ்த்திடவும், குழந்தைகள் மையங்களில் குழந்தைகளுக்கான ஆதாா் அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருவதால் அச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.