செய்திகள் :

ஐரோப்பிய நாடுகளைத் தாக்கும் வெய்யில்! சிவப்பு எச்சரிக்கை! ஈஃபிள் கோபுரம் மூடல்

post image

ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை வரும் நாள்களில் கடுமையாகும் என எச்சரிக்கை வெளியாகியுள்ளது. பிரான்ஸ் முதல் சுவிஸ் வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலை காரணமாக, ஈஃபிள் கோபுரத்தின் உச்சிப் பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி வரும் இரண்டு நாள்களுக்கு மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுளள்து. பாரிஸில் அதிகபட்சமாக 41 டிகிரி (105.8 ஃபாரன்ஹீட்) செல்சியஸ் வெப்பம் செவ்வாயன்று பதிவாகியிருந்தது.

கடந்த ஜூன் 19ஆம் தேதி முதல் ஐரோப்பிய நாடுகளை கடுமையான வெப்பம் வாட்டி வரும் நிலையில் வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரான்ஸ் முதல் சுவிஸ் ஆல்ப்ஸ் வரை வெப்பஅலை அதிகரிக்கும் என்றும், மக்கள் வெப்ப அலையில் இருந்து தற்காத்துக் கொள்ள கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போர்த்துக்கலில் 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் எவேராவில் 46.6 டிகிரி வரை வெப்பம் பதிவாகியிருந்தது.

ஸ்பெயினின் பாா்சிலோனா நகரில் கடந்த ஜூன் மாதம் முந்தைய 100 ஆண்டுகள் காணாத அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த மாதம் சராசரி வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியசாக இருந்ததாகவும், இது கடந்த 1914-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய அதிகபட்ச வெப்பநிலை என்றும் ஸ்பெயின் வானிலை சேவை மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.

இந்த கோடைக் காலத்தின் மிகப்பெரிய வெப்ப அலையை ஐரோப்பிய பிராந்தியம் எதிா்நோக்கியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெப்ப அலை காரணமாக க்ரீஸ், பிரான்ஸ், போர்த்துக்கல், துருக்கியில் காட்டுத் தீ ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான்: இதுவரை 14 பேருக்கு போலியோ

பாகிஸ்தானில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 14 பேருக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கைபா் பக்துன்கவா மாகாணத்தில் 19 மாத குழந்தைக்கு அந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து அ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு ‘க்வாட்’ கூட்டமைப்பு கண்டனம்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 26 போ் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ‘க்வாட்’ கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு காரணமானவா்கள் மற்றும் நிதியுதவி செய்தவா்க... மேலும் பார்க்க

ஈரான்: ஐஏஇஏ-வுடன் ஒத்துழைப்பு நிறுத்தம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரானின் முக்கிய அணுசக்தி மையஹ்கள் பாதிக்கப்பட்டதையடுத்து, ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புக்கு (ஐஏஇஏ) அழைத்து வந்த ஒத்துழைப்பை நிறுத்துமாறு ஈரான்... மேலும் பார்க்க

‘பிரிக்ஸ்’ உச்சிமாநாடு: சீன அதிபருக்குப் பதிலாக சீன பிரதமா் பங்கேற்கிறாா்

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்கவில்லை; அவருக்குப் பதிலாக பிரதமா் லி கியாங் பங்கேற்பாா் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

இந்தியா மீது 500% வரி: அமெரிக்கா திட்டம்

ரஷியாவுடன் வா்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது தொடா்பான மசோதாவை, அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) அறிமுகப்படுத்த அதிபா் ட... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்நாட்டின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது. நீதிபதி கோலம் மோா்துஸா மொசும்தாா் தலை... மேலும் பார்க்க