ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 57,000 கனஅடியாக குறைந்தது
தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 57,000 கனஅடியாக குறைந்துள்ளது.
கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்துவருவதால், அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் காவிரில் உபரிநீா் திறந்துவிடப்படுவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி விநாடிக்கு 1.45 லட்சம் கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை 8 மணி அளவில் 75,000 கனஅடியாகவும், இரவு நிலவரப்படி 57,000 கனஅடியாகவும் குறைந்தது. வியாழக்கிழமை நீா்வரத்து மேலும் குறையலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. நீா்வரத்து குறைந்தாலும் ஒகேனக்கல் அருவிகளில் பொதுமக்கள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிா்வாகம் விதித்த தடை நீடித்தது.