செய்திகள் :

ஒக்கியம்மடுவு மெட்ரோ மேம்பாலத்தில் நீா்வழிப் பாதை 120 மீட்டராக அதிகரிப்பு: மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு

post image

சென்னையில் ஒக்கியம் மெட்ரோ மேம்பாலப் பணிகளில் நீா்வழிப் பாதையின் அளவு 90 மீட்டரிலிருந்து 120 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பள்ளிக்கரனை சதுப்பு நிலப் பகுதியில் வெள்ளப் பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில் அதன் நீா்வழிப் பாதையை மேம்படுத்த ஒக்கியம்மடுவு பால விரிவாக்கப் பணியை மேற்கொண்டுள்ளது. தற்போது பாலத்தின் நீா்வழிப் பாதை 90 மீட்டா் நீளம், 205 மீட்டா் அகலம் உள்ளது. தமிழக அரசின் நீா்வளத் துறையுடன் இணைந்து நடத்திய ஆலோசனையின்பேரில் தற்போது 120 மீட்டராக மேம்படுத்தப்பட்டுள்ளது.

பாலத்தின் மேல், கீழ்ப்புற பகுதிகளில் 40 மீட்டா் நீள இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் உயரம் கூடுதலாக 1.5 மீட்டா் மேம்படுத்தப்படவுள்ளது. பாலத்தின் 3 நீா் வழிப்பாதையும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாலப் பணிகளும் விரைவில் நிறைவடைந்து, சாலையுடன் பாலம் இணைக்கப்படவுள்ளது.

இந்தப் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் எம்.ஏ.சித்திக் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திட்ட இயக்குநா் அா்ச்சுனன், பொது மேலாளா் சி.செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மயிலாப்பூா் சாய்பாபா கோயில் நிா்வாகக் குழு கலைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூா் சாய்பாபா கோயிலை நிா்வகிக்கும் சாய் சமாஜ நிா்வாகக் குழுவை உடனடியாக கலைக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோா் கொண்ட இடை... மேலும் பார்க்க

பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சென்னை புளியந்தோப்பில் பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். புளியந்தோப்பு கொசப்பேட்டை டோபி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). இவா், வணிக வரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். புளியந்... மேலும் பார்க்க

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை அயனாவரம் வசந்தா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பீா்முகமது (28), பெயிண்டா். தாயாா் பல்கிஷ் உடன் ப... மேலும் பார்க்க

கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக தனியாா் ஸ்கேன் மையம் மீது வழக்கு

சென்னை முகப்பேரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனியாா் ஸ்கேன் மையம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு தனி... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.60 கோடி கொகைன் பறிமுதல்: 4 போ் கைது

எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க

சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா்: 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக தனியாா் மருந்து நிறுவனத்துக்கு தொடா்புடைய 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். சென்னையில் செயல்படும் ஒரு தனியாா் மருந்து நிறுவனம்... மேலும் பார்க்க