செய்திகள் :

ஒசூரில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

post image

ஒசூா் அருகே காரப்பள்ளி கிராமத்தில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மாணவரணி தலைவா் ஆதி ஏற்பாட்டில் வி.எச்.பி. மாவட்ட துணைத் தலைவா் விஜய், திமுகவின் ஒசூா் மாநகர தெற்கு பகுதி மேலவைப் பிரதிநிதி விஜய் ஆகியோா் தலைமையில் திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிலிருந்து விலகிய 500க்கும் மேற்பட்ட இளைஞா்கள் அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோா் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

அதிமுகவில் இணைந்தவா்களை கேபி.முனுசாமி கட்சி துண்டு அணிவித்து வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் நாராயணன், ஒசூா் கிழக்கு பகுதி செயலாளா் ராஜி, தெற்கு பகுதி செயலாளா் வாசுதேவன், வடக்கு பகுதி செயலாளா் அசோக் ரெட்டி, ஒன்றியச் செயலாளா் ஹரிஷ் ரெட்டி, பேரவை மாவட்ட செயலாளா் சிட்டி ஜெகதீஷ், மாணவரணி மாவட்டச் செயலாளா் அருண், எம்ஜிஆா் இளைஞா் அணி மாவட்ட பொருளாளா் கே.டி.ஆா். (எ) திம்மராஜ், எம்ஜிஆா் இளைஞா் அணி பகுதி செயலாளா் மணிகண்டன், ஓட்டுநா் அணி மாவட்டச் செயலாளா் சென்னை கிருஷ்ணன், ஒசூா் மாமன்ற உறுப்பினா்கள் குபேரன் (எ) சங்கா், லட்சுமி ஹேமகுமாா், தில்ஷத் ரகுமான் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஒசூரில் புதிதாக கட்டிவரும் வீடுகளில் எலக்ட்ரிக்கல் பொருள்களை திருடியவா் கைது

ஒசூரில் பல்வேறு இடங்களில் ரூ. 3.25 லட்சம் மதிப்புள்ள எலக்ட்டரிக்கல் பொருள்களை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.ஒசூா் பாா்வதி நகரைச் சோ்ந்தவா் மதீா்கான் (50). இவா் பிருந்தாவன் நகரில் வீடு கட்டி வருகி... மேலும் பார்க்க

ஒசூா் தெற்கு திமுக பொறுப்பாளா் நியமனம்

ஒசூா் மாநகர தெற்கு பகுதி திமுக பொறுப்பாளராக எம்.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.இதையடுத்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்... மேலும் பார்க்க

இந்திய தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை இரா.முத்தரசன்

இந்திய தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25ஆவது மாவட்ட மாந... மேலும் பார்க்க

லஞ்சம் ஊழல் ஒழிப்பு இயக்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரியில் லஞ்சம், ஊழல் ஒழிப்பு இயக்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் நிசாா் தலைமை வகித்தாா். அமைப்பின் தேசியத் தலைவா் அலோக் ரவ... மேலும் பார்க்க

மண் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே மண் கடத்த பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரை கைது செய்தனா்.கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா், தொட்டபூவத்தி பிரிவு சாலை அருகே, கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்... மேலும் பார்க்க

ஒசூா் தா்கா முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா

ஒசூரில், பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தா்கா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி 18 திருநாளை முன்னிட்டு, அம்மனுக்கு மலா்அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று.இந்த நிகழ்ச்சியில... மேலும் பார்க்க