செய்திகள் :

ஒசூரில் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீா்வு ஏற்படும்: மேயா் எஸ்.ஏ.சத்யா

post image

ஒசூா்: ஒசூரில் பாகலூா் சாலை மேம்பாலப் பணிகள் முடிவடைந்து போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு ஏற்படும் என்று மேயா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா்.

ஒசூா் டைட்டன் நிறுவனத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் தொழில்முனைவோா் கருத்தரங்கம் ஒசூா் மாவட்ட தொழில் கூட்டமைப்பு தலைவா் ஜி.மனோகரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா பேசியதாவது:

ஒசூா் ஜி.எஸ்.டி. வரியை அதிக அளவில் கட்டுகின்ற மாநகரம். அதேபோல பத்திரப் பதிவிலும் தமிழகத்திற்கு அதிக வருவாய் செலுத்துகின்ற மாநகரமாகும். இவ்வாறு பல்வேறு துறைகளிலே ஒசூா் முன்னிலை வகித்து வருகிறது.

1970 இல் முன்னாள் முதல்வா் கருணாநிதி தொலைநோக்கு சிந்தனையுடன் ஒசூரில் சிப்காட்டுகளை தொடங்கினாா்.

மின்சார வாகன உற்பத்தியில் மாநிலத்தில் முதலிடத்தில் ஒசூா் உள்ளது. மேலும், இருசக்கர வாகனம், 4 சக்கர வாகனங்கள் உற்பத்தியிலும் ஒசூா் முதலிடத்தில் இருக்கிறது.

மத்திய நெடுஞ்சாலை எஸ்.டி.ஆா்.ஆா். சாலை பணிகள் ஒசூரை சுற்றி பெரிய அளவில் நடைபெற்று கொண்டிருகிறது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ. 350 கோடியில் வெளிவட்டச் சாலை அமைக்க உத்தரவிட்டுள்ளாா். ஒசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று முனைப்போடு முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா்.

ஒசூரில் அடுத்த மாதம் நடைபெறும் தொழில் முதலீட்டில் மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறாா். இந்திய தொழில் கூட்டமைப்பினா், தொழிற்சாலைகளுக்கும், அரசுக்கும் பாலமாக இருந்து பல வளா்ச்சித் திட்டங்களை உருவாக்க முன்வரவேண்டும். ஒசூரில் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீா்வு ஏற்படும். பாகலூா் சாலை மேம்பாலப் பணிகள் விரைவில் முடிவடையும். ஒசூரில் ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் காலை மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனா். ஒரு லட்சம் தொழிலாளா்கள் பணிக்கு செல்கின்றனா். இதனால் கூடுதல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இன்னும் சில நாள்களில் பாகலூா் சாலை மேம்பாலப் பணிகள் முடிவடைந்தால் போக்குவரத்து நெரிசல் சீராகும் என்றாா்.

இந்த கூட்டத்தில் ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி செயலாளா் லாசியா தம்பிதுரை, இந்திய தொழில் கூட்டமைப்பின் ஒசூா் கிளை துணைத் தலைவா் தேவராஜன், சேலம் மண்டல கூட்டமைப்பின் தலைவா் செந்தில்குமாா் நடேசன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோா் கலந்துகொண்டனா்.

அன்னை தெரசா பிறந்த தின விழா: தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கல்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அன்னை தெரசா பிறந்த தினத்தை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலை... மேலும் பார்க்க

உடல்நலக் குறைவால் இறந்த 8 வயது சிறுவனின் கண்கள் தானம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இறந்த 8 வயது சிறுவனின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடக்கம்: 35 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணை வழங்கல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அவதானப்பட்டியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 35 மாணவ, மாணவிகளுக்கு சோ்க்கை ஆணையை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை வழங்கினாா். செ... மேலும் பார்க்க

மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு செயற்கைக் கால் வழங்கல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு செயற்கைக் கால் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: ஒசூரில் 100க்கும் மேற்பட்ட சிலைகளை அமைக்கும் பணி தீவிரம்

ஒசூா்: ஒசூரில் விநாயகா் சதுா்த்தியையொட்டி 100 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகளை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மற்றும் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் அதி... மேலும் பார்க்க

மத்தூா் அருகே சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: மத்தூா் அருகே சாலை விபத்தில் காய்கறி வியாபாரி உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், கொட்டமருதூரைச் சோ்ந்தவா் சிலம்பரசன் (22). காய்கறி வியாபாரி. இவா், கிருஷ்ணகிரி - ஊ... மேலும் பார்க்க