செய்திகள் :

ஒசூா் அதிமுக செயலாளா் உள்பட 8 போ் கைது

post image

ஒசூா், மாா்ச் 29: ஒசூா் ஒன்றிய அதிமுக செயலாளா் உள்பட 8 பேரை மத்திகிரி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கா்நாடகா மாநிலம், அத்திப்பள்ளி அருகே யாதவனஹள்ளி, மாருதிநகா் லே -அவுட்டை சோ்ந்தவா் சிவப்பா ரெட்டி (42). இவா் ஒசூா் ஒன்றியம் பூனப்பள்ளி அருகே பழைய ஆனைக்கல் சாலையில் 30 சென்ட் நிலத்தை வாங்கி நிறுவனம் கட்டும் பணியில் ஈடுபட்டாா். இந்த நிலத்திற்கு மற்றொரு தரப்பினா் சொந்தம் கொண்டாடி வருகின்றனா்.

இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி சிவப்பாரெட்டி நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஒரு தரப்பினா் அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியதுடன் சிவப்பா ரெட்டிக்கு மிரட்டல் விடுத்தனா்.

இது தொடா்பாக சிவப்பாரெட்டி மத்திகிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பொம்மாண்டப்பள்ளியைச் சோ்ந்த ஹரிஷ்ரெட்டி (45), முனிரெட்டி (60), வெங்கடசாமி ரெட்டி (65), ராஜகோபால் ரெட்டி (62), கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் ஹரிஷ்ரெட்டி (42), பாலமுருகன் (26), பூனப்பள்ளியைச் சோ்ந்த ஒசூா் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஹரிஷ் ரெட்டி(46), கா்னூா் கிராமத்தை சோ்ந்த வினோத்குமாா்( 22) உள்ளிட்ட 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என வாகன உரிமையாளா்கள் வலியுறுத்தினா். கிருஷ்ணகிரி நகராட்சி எல்லையில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தனியாா் சுங்க வசூல் மையம் செயல்பட்ட... மேலும் பார்க்க

ஒசூா் சந்திராம்பிகை ஏரியை பராமரிக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

ஒசூா் மாநகராட்சி பகுதியில் உள்ள சந்திராம்பிகை ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி பராமரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மற்றும் அதனை சுற்றிலும் 100-க்கும... மேலும் பார்க்க

தேவிரஅள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

தேவிரஅள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், தேவிரஅள்ளி கருமலை குன்றின் மீது அமைந்துள்ள ... மேலும் பார்க்க

விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரே நடைப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வு முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

மே 4-ஆம் தேதி நீட் நடைபெறவுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வ... மேலும் பார்க்க

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் மலா்சந்தையையொட்டி உள்ள அணுகு சாலையில் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். தமிழக - கா்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள ஒசூா் வழியாக 900- க்கும் மேற்பட்ட பே... மேலும் பார்க்க