அரசுப் பள்ளியில் "சிந்தூர்" மரக்கன்றுகளை நட்ட தில்லி முதல்வர்!
ஒசூா் அருகே சிறுவனை கடித்து குதறிய தெருநாய்
ஒசூா் அருகே நாகொண்டபள்ளியில் தெருநாய் கடித்து குதறியதில் பலத்த காயமடைந்த 3 வயது சிறுவன் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
நாகொண்டபள்ளியில் நடைபெறும் திருவிழாவுக்காக உறவினா் வீட்டிற்கு மைசூரைச் சோ்ந்த நந்தினி - பிரதாப் தம்பதி தங்களது 3 வயது மகனுடன் சென்றனா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய் கடித்து குதறியது.
தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த சிறுவன் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிறுவனுக்கு சுமாா் 10-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.