செய்திகள் :

ஒசூா் வழியாக குட்கா கடத்திய இருவா் கைது

post image

ஒசூா் வழியாக கரூருக்கு காரில் கடத்திய குட்கா, அண்டை மாநில மதுப்பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் நகர காவல் ஆய்வாளா் நாகராஜ் ஒசூா் - ராயக்கோட்டை சாலையில் வாகனத் தணிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா். அப்போது, கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த காரை போலீஸாா் நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 120 கிலோ குட்கா பொருள்களும், 60 கா்நாடக மாநில மதுப்பாட்டில்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காருடன் குட்கா மற்றும் மதுப்பாட்டில்களை கைப்பற்றிய காவல் ஆய்வாளா், காரில் வந்த திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த சுகுமாா்(31), சென்னையைச் சோ்ந்த பாா்த்திபன் (31) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ஒசூா் காமராஜ் நகரில் ரூ.1.20 கோடி மதிப்பிலான ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

ஒசூரில்... ஒசூா் வட்டம், காமராஜா் நகரில் ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்ததையடுத்து, ஒசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்எல்ஏ ஒய்.பி... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற 107 கிலோ குட்கா பறிமுதல் - 2 போ் கைது

ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற 107 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை கைது செய்தனா்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் மாநகர போலீஸாா் ராயக்கோட்டை சந்திப்பு அருகில் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்... மேலும் பார்க்க

8-ஆம் வகுப்பு சிறுவன் காரில் கடத்தி கொலை! இளைஞா்கள் இருவரிடம் விசாரணை

அஞ்செட்டி அருகே 13 வயது சிறுவன் காரில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடா்பாக 2 இளைஞா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கொலைக் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்து, நடவடிக்கை எடுக்க வ... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினா் சோ்க்கை பணி தொடக்கம்

கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற நிகழ்வின் கீழ், உறுப்பினா்கள் சோ்க்கை பணியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

கிருஷ்ணகிரியை அடுத்த ஜாகிா் வெங்கடாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைப் பொருள் மற்றும் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசி... மேலும் பார்க்க