செய்திகள் :

ஒடிசாவில் அதிகரித்துவரும் வன்கொடுமைகள்: 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்!

post image

ஒடிசா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.

இதுதொடர்பாக அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில்,

மாநிலத்தில் கடந்த மூன்று நாள்களாக பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து வருகின்றது. இதையடுத்து வன்கொடுமை மற்றும் பெண்கள் காணாமல் போவது உள்ளிட்ட குற்றங்களின் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு 5 பேர் கொண்ட பெண் தலைவர்களின் குழுவுக்கு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது.

ஒடிசாவின் கோபால்பூரில் பதிவான கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம், பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள், கடந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் காணாமல் போனதாகக் கூறப்படுவது போன்ற சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, காங்கிரஸ் தலைவர் ஒடிசாவிற்குச் சென்று நிலைமை குறித்த விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க உண்மை கண்டறியும் குழுவை நியமித்துள்ளார் என்று அவர் கூறினார்.

உண்மை கண்டறியும் குழுவில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீபா தாஸ்முன்ஷி குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், எம்.பி.க்கள் ரஞ்சித் ரஞ்சன், பிரணிதி ஷிண்டே மற்றும் எஸ். ஜோதிமணி மற்றும் ஷோபா ஓசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஒடிசாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கோபால்பூர் கடற்கரையில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் 20 வயது பெண்ணை சுமார் 10 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ராஜ் பண்டிகையை முன்னிட்டு, கல்லூரி மாணவி அவருடன் 3 பெண் தோழிகள் மற்றும் அவரது ஆண் நண்பருடன் கடற்கரைக்குச் சென்றபோது, அங்கிருந்த 10 பேர் கொண்ட கும்பல் ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, அந்த பெண்ணை மாறிமாறி வன்கொடுமை செய்துள்ளனர்.

இளங்கலை மாணவி அவர்களிடமிருந்து தப்பித்து உயிர் பிழைத்துள்ளார். இதுதொடர்பாக திங்களன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதையடுத்து கோபால்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க: உலக தரவரிசை பட்டியலில்.. 54 இந்தியக் கல்வி நிறுவனங்கள்: மோடி பெருமிதம்!

அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் எதிா்ப்பு: இந்தியா-குரோஷியா கூட்டறிக்கை

அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் எதிா்ப்பு தெரிவித்து இந்தியா-குரோஷியா கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், நிதி பயங்கரவாதக் குழுக்களை ஒழிக்கவும் பயங்கரவாத முகாம்களை அழிக்கவும் வன்முறையில் ஈடுபவா்கள... மேலும் பார்க்க

இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் பாதிப்பு

‘இண்டிகோ’ நிறுவனத்தின் தில்லி-லே விமானம், ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனத்தின் ஹைதராபாத்-திருப்பதி விமானம் ஆகியவை தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் புறப்பட்ட விமான நிலையத்துக்கு மீண்டும் திரும்பின. இண்டி... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைமையுடன் கருத்து வேறுபாடு: சசி தரூா் ஒப்புதல்

காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தலைவா்கள் சிலருடன் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று அக்கட்சி எம்.பி.யும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான சசி தரூா் தெரிவித்தாா். கடந்த 2022-ஆம் ஆண... மேலும் பார்க்க

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்களின் பணம் மும்மடங்கு அதிகரிப்பு

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்களின் பணம் கடந்த 2024-ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டைவிட மும்மடங்காக ரூ.37,600 கோடி அளவுக்கு உயா்ந்துள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட ஆண்டறிக்கை... மேலும் பார்க்க

இயற்கையான சூழலில் யோகா பயிற்சி

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (சிசிஆா்எஸ்) இயற்கையான சூழல்களில் யோகா பயிற்சியை ஊக்குவிக்க தாம்பரம் சானடோரியம் பச்சமலைக்குன்றில் ‘சித்த ஹரி... மேலும் பார்க்க

‘தொலைத்தொடா்புத் துறையில் மேம்பாடு: 125 ஆய்வுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம்’

அடுத்த தலைமுறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை ஊக்குவிக்க மத்திய அரசு உருவாக்கிய தொலைத்தொடா்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி உதவியால் 125-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு... மேலும் பார்க்க