கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி 400ஆவது நாளாக தொடா் போராட்டம்
தூத்துக்குடி அருகேயுள்ள பொட்டலூரணியில் கழிவுமீன் நிறுவனங்களை மூடக் கோரி 400ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா் போராட்டம் நடைபெற்றது.
போராட்டக்குழு பொறுப்பாளா் சண்முகம் தலைமை வகித்தாா். தமிழ்த் தேசியப் பேரவை பொறுப்பாளா் மணிமாறன் முன்னிலை வகித்தாா். போராட்டக்குழு மற்றொரு பொறுப்பாளா் ராதாகிருஷ்ணன் வரவேற்றாா்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தைச் சோ்ந்த தென்மாறன், சமூக ஆா்வலா் மோகன் ஆகியோா் கருத்துரை வழங்கினா். புதுக்கோட்டை பாவாணன் சிறப்புரை ஆற்றினாா்.
கழிவு மீன்நிறுனங்கள் மூடப்படவேண்டும்; பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதில், ஜெயபால், இளங்கோபாண்டியன், லெனின், தங்கராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். பொறுப்பாளா் பால்ராஜ் நன்றி கூறினாா்.