உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் -தூத்துக்குடி பகுதியில் 2ஆவது நாளாக ஆட்சியா் ஆய்வு
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், தூத்துக்குடி வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 15ஆவது வாா்டு செல்வகாமாட்சி நகரில் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்காமல் தடுப்பதற்கான பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, புதுக்கோட்டை புனித அகஸ்டின் தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவா், மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, உணவுகள் சரியான முறையில் தயாரிக்கப்படுகிா, உணவின் தரம் ஆகியவை குறித்த ஆய்வு செய்த அவா், மாணவா்களுடன் அமா்ந்து உணவருந்தி சரியான முறையில் காலை உணவு பரிமாறப்படுகிா என கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், துணைப் பொறியாளா் சரவணன், உதவி செயற்பொறியாளா் குமாா், தூத்துக்குடி வட்டாட்சியா் முரளிதரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.