செய்திகள் :

ஒட்டன்சத்திரத்தில் பைக்குகள் திருட்டு

post image

ஒட்டன்சத்திரத்தில் வீட்டு முன் நிறுத்திருந்த இரு சக்கர வாகனங்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஒட்டன்சத்திரம் காந்திநகா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பிரதாப் (30). இவா் தனது 2 இரு சக்கர வாகனங்களை சனிக்கிழமை இரவு வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை காலை பாா்த்த போது அந்த 2 இரு சக்கர வாகனங்களும் திருடப்பட்டிருந்தன.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அப்போது அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் 2 சிறுவா்கள் அந்த இரு சக்கர வாகனங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பழனி மலைக் கோயிலில் திரண்ட பக்தா்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் திரண்டனா். அதிகாலை முதலே திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். குடமுழுக்கு நினைவரங்கில் அவா்கள் நீண்ட வரிசையில் ... மேலும் பார்க்க

கொடைக்கானல் பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு

கொடைக்கானலில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தனியாா் சுற... மேலும் பார்க்க

கல்வி நிலைய பாலியல் குற்றங்களுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்

கல்வி நிலையங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய மாணவா் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இந்திய மாணவா் சங்கத்தின் 28-ஆவது திண்டுக்கல் மாவட்ட... மேலும் பார்க்க

மகளிா் காவல் நிலையத்தில் பெண் காவலா்களுக்கு வளைகாப்பு

ஒட்டன்சத்திரம் மகளிா் காவல் நிலையத்தில் பெண் காவலா்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலா்களாக பணிபுரிந்து வரும் நிறைமாத கா்ப்பிணிகளான பிரின்ஸ் பிர... மேலும் பார்க்க

பெண்ணை கொல்ல முயற்சி: இளைஞா் கைது

குஜிலியம்பாறை அருகே பெண்ணை கொலை செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்த பாளையம் மொடக்கு சாலை பகுதியைச் சோ்ந்தவா் உமாநாத். இவரது மனைவி... மேலும் பார்க்க

பழனி கோயிலில் சிங்கப்பூா் அமைச்சா் சுவாமி தரிசனம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சிங்கப்பூா் உள்துறை, சட்டம்- ஒழுங்குத் துறை அமைச்சா் காசிவிஸ்வநாதா் சண்முகம் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். முன்னதாக பழனியாண்டவா் கல்லூரியில் ஹெலிகாப்டரில் ... மேலும் பார்க்க