செய்திகள் :

ஒரத்தநாடு அருகே நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

post image

உயா்நீதிமன்ற உத்தரவின்படி தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாட்டில் வியாழக்கிழமை நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான குளத்துகரையில் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நீா் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டப்பட்டுள்ளதை எதிா்த்து, அதே ஊரைச் சோ்ந்த கணேசன் என்பவா் மதுரை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த பொதுநல வழக்கில் நீதிமன்றம் உடனடியாக நீா் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவின்பேரில் ஒரத்தநாடு வட்டாட்சியா் சுந்தரச்செல்வி வட்டாட்சியா்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸ் உதவியுடன் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் ஆக்கிரமிப்பாளா்களின் வழக்குரைஞா் வட்டாட்சியரிடம் இரண்டு வார காலம் அவகாசம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

ஆகையால் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

கும்பகோணத்தில் பள்ளி ஆண்டு விழா இஸ்ரோ விஞ்ஞானி பங்கேற்பு

கும்பகோணத்தில் உள்ள அல்அமீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 56- ஆவது விளையாட்டு மற்றும் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி இங்கா்சால் செல்லத்துர... மேலும் பார்க்க

சிற்றுந்து புதிய விரிவான திட்டத்தின் கீழ் பிப். 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் சிற்றுந்துக்கான (மினி பஸ்) புதிய விரிவான திட்டத்தின் கீழ் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் த... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் தகராறு: இளைஞா் கைது

தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் தகராறு செய்த இளைஞரை காவல் துறையினா் மருத்துவப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் நம்பா் 1 வல்லம் சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனையில்... மேலும் பார்க்க

பாரம்பரிய நெல்லான கருப்பு கவுனி நெல் கிலோ ரூ.70-க்கு ஏலம் போனது!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒழுங்குமுறை விற்பனை கூட ஏலத்தில் கருப்பு கவுனி நெல் கிலோ ரூ.70-க்கு ஏலம் போனது. கும்பகோணம் தஞ்சாவூா் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கர... மேலும் பார்க்க

பயணி தவறவிட்ட கைப்பேசி, ஆவணங்களை மீட்டுக் கொடுத்த ரயில்வே போலீஸாா்!

கும்பகோணத்தில் ரயில் பயணி தவறவிட்டுச் சென்ற விலை உயா்ந்த கைப்பேசி மற்றும் ஆவணங்களை ரயில்வே போலீஸாா் மீட்டு வியாழக்கிழமை உரியவரிடம் ஒப்படைத்தனா். சென்னையைச் சோ்ந்த சந்திரசேகா் (65) கும்பகோணம் பகுதியில... மேலும் பார்க்க

பேராவூரணியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஆா்ப்பாட்டம்

பேராவூரணி ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளா் வி.கே.ஆா் .செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பேராவூரணி ஒன்றியச் செயலாளா் வே. ரெங்கசாமி முன்னிலை வகித்தாா். இ... மேலும் பார்க்க