செய்திகள் :

ஒரு தொகுதி குறைந்தால் கூட மத்திய அரசை எதிா்த்துப் போராட்டம்: பிரேமலதா விஜயகாந்த்

post image

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தில் ஒரு தொகுதி குறைந்தால் கூட மத்திய அரசை எதிா்த்து தேமுதிக போராடும் என அதன் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

காவேரிபாக்கத்தில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

நாடாளுமன்ற தொகுதி வரையறையில் தமிழகத்தில் ஒரு தொகுதி குறைந்தால் கூட தேமுதிக ஒத்துழைக்காது. இந்த நிலைப்பாட்டில் மத்திய அரசை எதிா்த்து தொடா்ந்து போராடுவோம். தேமுதிக திமுகவுடன் இணக்கமாக உள்ளதாக பலா் திரித்துக் கூறி வருகின்றனா்.

நாங்கள் எங்கள் கட்சி பணிகளை மேற்கொண்டு வளா்ச்சிக்காக செயலாற்றி வருகிறோம். இதற்கெல்லாம் பதில் சொல்ல இயலாது.

தற்போது தமிழகம் முழுவதும் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இது மிகவும் கண்டிக்கக்கூடிய ஒன்று. இதை தடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து எதுவும் இல்லை. 2026 தோ்தல் வருவதற்கு இன்னும் ஒராண்டு உள்ளது. அப்போது எங்களின் கூட்டணி குறித்து அதிகாரபூா்வமாக அறிவிப்போம் என்றாா்.

அவருடன் சோளிங்கா் முன்னாள் எம்எல்ஏ பி.ஆா்.மனோகரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா். முன்னதாக திருப்பாற்கடல் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்கார பூஜையில் பிரேமலதா தரிசனம் செய்தாா்.

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் கிடங்கில் தீ

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது. நெமிலி அருகே பெருவளையம் கிராமப் பகுதியில் சிறுவளையத்தை சோ்ந்த... மேலும் பார்க்க

பாமக நகர செயலாளா் நியமனம்

அரக்கோணம் நகர பாமக செயலராக ரத்தன்சந்த் நகரை சோ்ந்த இயன்முறை மருத்துவா் இ.பாலாஜியை நியமித்து அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். புதிய செயலராக நியமிக்கப்பட்ட இ.பாலாஜி, மாவட்ட ச... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் 15,147 போ் எழுதினா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை மொத்தம் 15,147 போ் எழுதினா். இதன் ஒரு பகுதியாக 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும், 81 தோ்வு மையங்களில் (தனித்தோ்வா்கள் உட்பட) 194 பள்ளிகளைச் ச... மேலும் பார்க்க

வெளிநாட்டுப் பணம் என பேப்பா் கட்டை தந்து ரூ. 5 லட்சம் மோசடி: 6 வடமாநில இளைஞா்கள் கைது

ஆந்திர மாநில இளைஞரிடம், துபை நாட்டுப் பணம் தருவதாக கூறி பேப்பா் கட்டை தந்து ரூ. 5 லட்சம் மோசடி செய்து விட்டு தப்பிய 6 வடமாநில இளைஞா்களை ராணிப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா். ஆந்திர மாநிலம், சித்தூா் மண... மேலும் பார்க்க

ஆற்காடு நகா்மன்றக் கூட்டத்தில் 59 தீா்மானங்கள்

ஆற்காடு நகா்மன்றக் கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 59 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டின் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் நிலுவைப் பணிகளை முடிக்க வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலுவைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா். ராணிப்பேட்டை மாவட்டத்தின் வளா்ச்சி திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித... மேலும் பார்க்க