செய்திகள் :

ஒரே ஒரு மரப்பெட்டி ஏன்? போப்பின் சவப்பெட்டியில் என்னென்ன வைக்கப்படும்?

post image

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு இன்று மதியம் 1.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முன்னதாக பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸின் உடல் சனிக்கிழமை இறுதிச் சடங்கு முடிந்ததும் அவரது விருப்பத்தின்படி புனித மேரி தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

266-ஆவது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.

போப் பிரான்சிஸ் உடல்நலம் குறைந்து சிகிச்சைபெற்று வந்தபோதே, தனக்கு மிக எளிமையான முறையில் இறுதிச் சடங்குகள் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அவரது விருப்பப்படி, அவரது உடல் ஒரே ஒரு மரத்தால் ஆன சவப்பெட்டியில் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.

வழக்கமாக,

பாரம்பரிய முறைப்படி, மூன்று வகையான சவப்பெட்டிகள் ஒன்றுக்குள் ஒன்று வைத்து நல்லடக்கம் செய்வது வழக்கம். அதாவது, ஊசி இலை மரத்தால் செய்யப்பட்ட சவப்பெட்டி, எஃகு சவப்பெட்டி, ஓக் மரத்தால் ஆன பெட்டிகள் என மூன்று பெட்டிகளுக்குள் ஒன்றன் உள் ஒன்று வைத்து நல்லடக்கம் செய்யப்படுவது வழக்கமாம்.

கைதட்டும் மக்கள்

போப் பிரான்சிஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தவரை, அப்பகுதியே இருண்ட அமைதியில் காத்திருந்த நிலையில், புனித பீட்டர் சதுக்கத்தில் இருந்த கூட்டம், போப்பாண்டவரின் சவப்பெட்டி ஊர்வலமாக வெளியே கொண்டு வரப்பட்டபோது கைதட்டத் தொடங்கினார்கள். இதுவும் அவர்களது பாரம்பரிய வழக்கம்.

உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரிய வீரர்கள்: உறுதி செய்தது ரஷியா!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்கள் ஈடுபட்டதை ரஷிய ராணுவம் உறுதி செய்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு முதல் உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில்... மேலும் பார்க்க

ஈரான்: கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து; 115 பேர் காயம்

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி வெடிவிபத்தில் 115 பேர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நேபாளத்தில் பாகிஸ்தான் தூதரகம் முன்பு போராட்டம்!

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து நேபாளத்திலுள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு: 2 லட்சம் பேர் பங்கேற்பு

வாடிகனில் மறைந்த போப் பிரான்சிஸ் (88) இறுதிச்சடங்கில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களும் திரண்டுள்ளனர்.சனிக்கிழமை மதியம் 1.30 மணியள... மேலும் பார்க்க

மியான்மரில் புதிய நிலநடுக்கம் ஏற்படும் எனக் கூறிய டிக்டாக் ஜோசியக்காரர் கைது!

மியான்மர் நாட்டில் புதிய நிலநடுக்கம் ஏற்படும் எனக் கூறி விடியோ வெளியிட்ட டிக்டாக் ஜோசியக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் டிரம்ப்புக்கு அவமரியாதையா?

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு மூன்றாவது இருக்கை அளிக்கப்பட்டது நெட்டிசன்களிடையே பேசுபொருளாகி உள்ளது.வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை ... மேலும் பார்க்க