செய்திகள் :

ஒரே நாளில் குடும்பத்துடன் ஊட்டியை சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? பட்ஜெட் ஸ்பாட்ஸ்!

post image

நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஓர் அழகான சுற்றுலா மலைவாசஸ்தல நகரம்தான் ஊட்டி.

இங்கு கொட்டும் அருவிகள், அமைதியான ஏரிகள், அடர்ந்த காடுகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் என சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்க பல இடங்கள் உள்ளன.

ஊட்டி அதன் இனிமையான காலநிலை மற்றும் இயற்கை அழகு நகர சலசலப்பில் இருந்து விலகி செல்ல ஒரு சிறந்த இடமாக உள்ளது. அப்படி ஊட்டியில் ஒரே நாளில் குடும்பத்துடன் பார்வையிட இருக்கும் இடங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்

தாவரவியல் பூங்கா

650 க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் மற்றும் மரங்களுக்கு தாயகமாக இருக்கும் அரசு தாவரவியல் பூங்கா நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய இடமாகும். உங்கள் இனிமையான காலையை தாவரவியல் பூங்காவுடன் தொடங்கி அங்கு இருக்கும் அமைதியான தோட்டத்தை பார்வையிடலாம்.

ஊட்டி ஏரி

பூங்காவை பார்வையிட்ட பிறகு படகு சவாரி வசதி உள்ள அழகிய ஏரியான ஊட்டி ஏரிக்கு செல்லுங்கள். இங்கு மிதமாக, படகு சவாரி செய்து அங்கு இருக்கும் இயற்கை வளங்களை சுற்றிப் பார்த்து அனுபவியுங்கள்.

தொட்டபெட்டா சிகரம்

அடுத்ததாவது ஊட்டியின் மிக உயரமான இடமான தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லுங்கள். இது சுற்றியுள்ள நிலப்பரப்பின் காட்சியை வழங்குவதுடன் உங்களுக்கு தனித்துவமான அனுபவத்தையும் வழங்குகிறது. நீலகிரி எப்படி இருக்கிறது என்பதை மலையிலிருந்து நீங்கள் காணலாம்..

தேயிலை தோட்டம்

ஊட்டியின் சிக்னேச்சர் இடம்தான் இந்த தேயிலை தோட்டம். ஊட்டியில் இருக்கும் தேயிலை அருங்காட்சியத்தை நீங்கள் பார்வையிடலாம். இங்கு தேநீர் தயாரிக்கும் செயல்முறை காட்சிப்படுத்தப்படுகிறது, அதன் பின்னர் தேநீர் வாங்கி சுவைக்கலாம்.

ரோஜா தோட்டம்

மாலையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையான ரோஜாக்களை கொண்ட ரோஜா தோட்டத்தை பார்வையிடலாம். இந்த தோட்டம் ஓய்வு எடுக்கவும் ,இயற்கையான காட்சிகளை ரசிக்கவும் ஒரு அழகான இடமாக உங்களுக்கு அமையும்.

சேரிங் கிராஸ்

ஊட்டியில் உள்ள பிரபலமான ஷாப்பிங் இடமான சேரிங்க் கிராஸ் சென்று உங்களது நாளை முடிக்கலாம். இங்கு நீங்கள் ஊட்டி வந்ததன் நினைவாக சில பொருள்களை வாங்கிச் செல்லலாம், இங்கிருக்கும் உணவுகளையும் நீங்கள் சுவைத்து விட்டு செல்லலாம். அப்புறம் என்ன ஊட்டிக்கு ஒரு நாள் செல்ல தயாரா?

`இந்தியாவின் முதல் காபி சாகுபடி நடந்த இடம்' எங்கு தெரியுமா? - அப்படி என்ன ஸ்பெஷல்?

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவார்.அந்த வகையில் இந்தியாவில் அதிகம் அறியப்படாத ஒரு சுற்றுலா தளத்தை பற்றி கூறியிருக்கிறார். அ... மேலும் பார்க்க

அள்ளி அணைக்கும் இயற்கை; கோடைக்கு இதமாய் படகு சவாரி.. ஏழைகளின் ஊட்டியில் குவியும் மக்கள் - Spot Visit

ஏழைகளின் ஊட்டி ஏற்காடுஏழைகளின் ஊட்டி ஏற்காடுஏழைகளின் ஊட்டி ஏற்காடுஏழைகளின் ஊட்டி ஏற்காடு மேலும் பார்க்க

மியான்மார் நிலநடுக்கம் எதிரொலி; தாய்லாந்து பயணம் பாதுகாப்பானதா? வெளியுறவுத் துறை சொல்வது என்ன?

மியான்மாரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 6 பகுதிகளைப் பேரிடர் பகுதி என்று ராணுவ அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் தாய்லாந்து நாட்டிலும் உணரப்பட்டதாக ... மேலும் பார்க்க

வழிநெடுக அழகியல்! - தேசிய நெடுஞ்சாலை 85 பற்றித் தெரியுமா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

இந்தியர்களை ஒன்றிணைத்த ரயில்கள்; மகாத்மா காந்தியின் அனுபவம் என்ன? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கோடைகாலத்திலும் கிறிஸ்மஸ் கொண்டாடும் நகரம் பற்றி தெரியுமா? - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும்?

கிறிஸ்மஸ் என்றவுடன் டிசம்பர் மாதம் தான் நினைவிற்கு வரும், அந்த மாதம் முழுக்க கொண்டாட்டங்கள் இருக்கும் என்பது பலரும் அறிந்ததே. ஆனால் ஒரு சிறிய நகரத்தில் வருஷத்தில் 364 நாட்களும் கிறிஸ்மஸ் கொண்டாடப்படுக... மேலும் பார்க்க