செய்திகள் :

ஒரே போட்டியில் 3 சாதனைகள்: ஹிட் மேன் என்பதை நிரூபித்த ரோஹித் சர்மா!

post image

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

’எலிமினேட்டா்’ ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை நேற்றிரவு வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.

ரோஹித் சர்மா படைத்த சாதனைகள்

ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் 3 புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்த சீசனில் ஏற்ற இறக்கங்களோடு விளையாடிய இவரை ரசிகர்கள் ஹிட் மேன் என ஏன் அழைக்கிறார் என இந்தப் போட்டியில் நிரூபித்து காட்டினார்.

7,000 ஐபிஎல் ரன்களை கடந்து சாதனை

ஐபிஎல் தொடரில் 266 இன்னிங்ஸில் விளையாடி 7,038 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இதுதான் 2-ஆவது அதிகபட்ச ரன்களாகும். முதலிடத்தில் கோலி 8,618 ரன்களுடன் இருக்கிறார்.

21-ஆவது ஆட்ட நாயகன் விருது

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஆட்ட நாயகன் விருது வாங்கியவர்களில் 3-ஆம் இடம் பிடித்துள்ளார். இந்தியர்கள் வரிசையில் முதலிடத்தையும் தக்கவைத்துள்ளார்.

எபிடி வில்லியர்ஸ் - 25

கிறிஸ் கெயில் - 22

ரோஹித் சர்மா - 21

விராட் கோலி - 19

300 சிக்ஸர்களை கடந்த முதல் இந்தியர்

ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் (302)அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். 357 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெயில் முதலிடத்தில் இருக்கிறார்.

கெயில் - 357

ரோஹித் - 302

கோலி - 291

தோனி - 264

ஏபிடி - 251

இந்த வெற்றியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் ‘குவாலிஃபயா் 2’-வில் பஞ்சாப் கிங்ஸை சந்திக்கிறது.

முதல் முறை சாம்பியனாக முனைப்பு! பெங்களூரு - பஞ்சாப் இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) பலப்பரீட்சை நடத்துகின்றன.இரு அணிகளுமே முதல் முறையாக கோப்பை வெல்லும் முனைப்புடன் வருகின்றன... மேலும் பார்க்க

வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை: ஷ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் கோலாகலமாகத் தொடங்கிய 18-வது ஐபிஎல்... மேலும் பார்க்க

விராட் கோலிக்காக கோப்பையை வென்று கொடுக்க விரும்புகிறோம்: ஆர்சிபி கேப்டன்

விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க விரும்புவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நாளை (ஜூன் 3) நடைபெறும் இறுதிப்போட்டிய... மேலும் பார்க்க

ஆர்சிபியின் 18 வருட காத்திருப்பா? பஞ்சாப் கிங்ஸின் எழுச்சியா? முதல் கோப்பை யாருக்கு?

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை ... மேலும் பார்க்க

ஷ்ரேயாஸ் ஐயர், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம்!

பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா இருவருக்கும் பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. நடப்பு ஐபில் தொடரின் நேற்றிரவு நடைபெற்ற குவாலிஃபையர் 2- போ... மேலும் பார்க்க

ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!

ஐபிஎல்லில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து அந்த அணியின் உரிமையாளர் முத்தமிட்ட விடியோக்கள் இணைத்தில் வைரலாகி வருகின்றன.நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நட... மேலும் பார்க்க