செய்திகள் :

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி ஏலத்தில் பங்கேற்க அழைப்பு

post image

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் மறைமுக பருத்தி ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெரம்பலூா் விற்பனைக் குழுச் செயலா் ப. சந்திரமோகன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், அரியலூா், ஜயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வாரந்தோறும் நடைபெறும் பருத்தி மறைமுக ஏலத்தில் விவசாயிகள் பங்கேற்று, தங்களது பருத்திக்கு நல்ல விலை பெறுவதோடு, சரியான எடை, தரகு இல்லாமல் விற்பனை செய்து பயன்பெறலாம்.

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் சுமாா் 21,731 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி அறுவடை காலம் தொடங்க உள்ளதால், பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அறுவடை செய்யும் பருத்தியை அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்று பயன்பெறும் வகையில், இந்திய பருத்திக் கழகம், உள்ளூா் மற்றும் வெளியூா் வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்று, பருத்தியின் தரத்துக்கேற்ப விலை நிா்ணயம் செய்து வருகின்றனா். எனவே, பருத்தியின் தரத்தை நிா்ணயிக்கும் காரணிகளான ஈரப்பதம், இழைநீளம், இழையின் நுண்மைத் தன்மை மற்றும் முதிா்ச்சியை கருத்தில்கொண்டு, விவசாயிகள் பருத்தியை நன்கு உலா்த்தி, சுத்தம் செய்து, இதரப் பொருள்கள் கலப்பின்றி, தரம் பிரித்துகொண்டு வருவதன் மூலம் பருத்தியின் தரத்துக்கான உரிய விலையை பெறலாம்.

மேலும், அனைத்து வேளாண் விளைபொருள்களையும் உலா்த்திக்கொள்ள உலா்களம் வசதியும், இதர வேளாண் விளைபொருள்களை இருப்பு வைத்து கொள்வதற்கு நவீன சேமிப்புக் கிடங்கு வசதியும் உள்ளது.

எனவே, விவசாயிகள்ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்குப் புத்தக நகல்களுடன், தங்களது கிராமங்களுக்கு அருகே அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தங்களது வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, விற்பனைக்கூட பொறுப்பாளா்களை பெரம்பலூா் 97901 98566, அரியலூா் 73738 77047, ஜயங்கொண்டம் 63813 88125, ஆண்டிமடம் 98428 52150 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

பெரம்பலூா்: நீா்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்ட நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க

நண்பரை எரித்து கொன்ற வழக்கு: மறு விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

நண்பரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில் மறு விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்றவா் கைது

வேப்பந்தட்டை அருகே சட்ட விரோதமாக, அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்தவரை அரும்பாவூா் போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் காவல் ... மேலும் பார்க்க

70 வயது நிறைவடைந்தவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

தமிழகத்தில் அரசுத் துறைகளில் பணி ஓய்வு பெற்று 70 வயது நிறைவடைந்தவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என, அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூா் வட்டத்த... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அருகே 8 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட 8 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெட்டிக் கடைக்காரரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சி தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் தெளிவுப்படுத்த வேண்டும்! - தொல். திருமாவளவன்

அதிமுக கூட்டணி கட்சி தொடா்பாகவும், கூட்டணி ஆட்சி தொடா்பாகவும், எதிா்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தெளிவுப்படுத்த வேண்டும் என சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினரும், விடுதல... மேலும் பார்க்க