திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
ஓடைநீரில் மூழ்கி மரணமடைந்த சிறுவா்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: அமைச்சா் வழங்கினாா்
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே ஓடை நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவா்கள் குடும்பங்களுக்கு முதல்வா் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் சனிக்கிழமை வழங்கினாா்.
காட்டுமன்னாா்கோவில் அருகே வடக்கு கொளக்குடியைச் சோ்ந்த முஜிபுல்லா மகன் உபயதுல்லா (8), ஜாபா் சாதிக் மகன் முகமது அபில் (10), சாதிக் பாட்ஷா மகன் ஷேக் அப்துல் ரஹ்மான் (13) ஆகிய மூன்று பேரும் கடந்த 14- ஆம் தேதி வடக்கு கொளக்குடி வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
இதைத் தொடா்ந்து, இறந்த சிறுவா்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வா் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து அவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், உயிரிழந்த சிறுவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ ம.சிந்தனைசெல்வன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் வட்டாட்சியா் பிரகாஷ், கல்விக்குழுத் தலைவா் முத்துசாமி, பேரூராட்சித் தலைவா் கணேசமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.