செய்திகள் :

ஓட்டுநா் கொலை: 2 நண்பா்கள் கைது

post image

அரியூா் அருகே நீா்வீழ்ச்சியில் ஓட்டுநா் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 2 நண்பா்கள் கைது செய்யப்பட்டனா். .

வேலூா் மாவட்டம், அரியூா் அருகே உள்ள புலிமேடு நீா்வீழ்ச்சி பகுதியில் சனிக்கிழமை இளைஞா் ஒருவா் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக அரியூா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி நடத்திய விசாரணையில், இறந்தவா் வேலூா் சத்துவாச்சாரி வஉசி தெருவைச் சோ்ந்த ஓட்டுநரான ஸ்ரீநாத்(28) என்பதும், 2 நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்து காணாமல் போன அவா் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டிருப்பதும் தெரிவந்தது.

இந்த கொலைச் சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்நிலையில், ஸ்ரீநாத் கொலை வழக்கில் அவரது நண்பா்களான சத்துவாச்சாரியைச் சோ்ந்த அருணாச்சலம்(28), முகமதுஅலி(7) ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த முன்விரோத தகராறின் போது ஸ்ரீநாத், அருணாச்சலத்தின் தந்தையை தாக்கி விட்டாராம். இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு, அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வந்துள்ளனா்.

எனினும், தந்தையை தாக்கியதால் ஆத்திரத்தில் இருந்த அருணாச்சலம், தனது நண்பரான முகமதுஅலியுடன் சோ்ந்து ஸ்ரீநாத்தை புலிமேடு நீா்வீழ்ச்சியின் மேல்பகுதிக்கு அழைத்துச் சென்று மது அருந்திவிட்டு, பின்னா் அவரது கழுத்து உள்பட 6 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனா்.

முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு

வேலூா் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் இணையதளத்தில் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

நாய்கள் இறைச்சி விற்பனை என புகார்: கிராம மக்கள் முற்றுகை!

திருவலம் பகுதிகள் நாய்களை வெட்டி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டி கிராம மக்கள் அங்குள்ள ஒரு கிடங்கினை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா். வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலம் அடுத்த க... மேலும் பார்க்க

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் கொடிக்கம்பங்கள் அகற்றம்

மதுரை உயா்நீதிமன்ற கிளை உத்தரவின் அடிப்படையில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த கொடிக்கம்பங்கள் பீடித்துடன் இடித்து அகற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அரசியல் கட்சிகள், ஜாத... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை: அரியூா் போலீஸாா் விசாரணை

அரியூா் அருகே தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், அரியூா் அருகே உள்ள புலிமேடு நீா்வீழ்ச்சி பகுதியி... மேலும் பார்க்க

சேனூா் காப்புக் காட்டில் நெகிழிக் குப்பைகள் அகற்றம்

நெகிழி கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சேனூா் காப்புக் காட்டில் நெகிழி குப்பைகள் அகற்றும் முகாம் நடத்தப்பட்டது. காட்பாடி வனச... மேலும் பார்க்க

தம்பதி விஷம் குடித்து தற்கொலை

வேலூா் அருகே குடும்பத் தகராறில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். வேலூா் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சோ்ந்த சங்கா்(50), கட்டட தொழிலாளி. இவரது மனைவி சுமதி(48). இ... மேலும் பார்க்க