செய்திகள் :

'ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார்' - நயினார் நாகேந்திரன்

post image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

"தமிழ்நாட்டில் தற்போதைய ஆட்சி, மக்களுக்கு எதிரான ஆட்சி. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் எல்லாரும் ஒன்றிணைய வேண்டும். நாட்டு மக்களின் நலன் கருதி அந்தந்த கட்சித் தலைவர்கள் முடிவு எடுக்க வேண்டும். ஆனால், அவர்களின் முடிவுக்கு நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது.

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. கூட்டணி தொகுதி விவரங்கள் பின்னர் பேசப்படும்.

ஓ. பன்னீர்செல்வம் ஏற்கெனவே பாஜக கூட்டணியில் இருக்கிறார். எனவேதான் அமித் ஷா வருகையின்போது அவரை அழைக்கவில்லை. அமித் ஷா வந்ததற்கான காரணம் வேறு. ஓபிஎஸ் கூட்டணியில் இருப்பதால் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவருமே பாஜக கூட்டணியில்தான் இருக்கின்றனர்.

அதிமுக உள்கட்சி பிரச்னைகள் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இப்போது இபிஎஸ்தான் கட்சியின் தலைவராக இருக்கிறார். பின்னர் நிலைமை மாறும்போது பார்க்கலாம்" என்று கூறினார்.

மேலும் தமிழ்நாட்டில் தினசரி நடைபெறும் கொலை, போதைப்பொருள் புழக்கம் போன்ற குற்றச் சம்பவங்கள் வழக்கமானதாக மாறிவிட்டதாகவும், காவல்துறையை முதல்வர் முழுமையாக கையாள முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க | 'ஆபரேஷன் சிந்தூர் ட்ரைலர்தான்; பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த பாகிஸ்தான்' - ராஜ்நாத் சிங்

ஒரே தோ்வு மையத்தில் வேதியியலில் 167 போ் சதம்: முறைகேடு நிகழவில்லை -அமைச்சா் அன்பில் மகேஸ்

செஞ்சியில் பிளஸ் 2 பொதுத் தோ்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தோ்வு மையத்தில் 167 போ் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் முறைகேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) தஞ்சாவூா், திருவாரூா் உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் கடற்கரை - வேளச்சேரி, ஆவடி ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை - வேளச்சேரி, ஆவடி இடையே இயங்கும் 24 புறநகா் மின்சார ரயில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

நிகழாண்டில் 5,730 தமிழா்கள் ஹஜ் புனித பயணம்: அமைச்சா் சா.மு.நாசா் தகவல்

நிகழாண்டில் 5,730 தமிழா்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். தமிழ்நாட்டிலிருந்து அரசு மானியத்துடன் ஹஜ் ப... மேலும் பார்க்க

திருச்சி ஊட்டத்தூா் சிவன் கோயிலில் பராந்தகசோழன் கால கல்வெட்டு

திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ள சிவன் கோயிலில் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநில அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்... மேலும் பார்க்க

பி.இ. சோ்க்கை: 10 நாள்களில் 1.69 லட்சம் மாணவா்கள் பதிவு: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 10 நாள்களில் 1,69,634 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்க... மேலும் பார்க்க