செய்திகள் :

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கென இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அமைச்சர்

post image

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று மகாராஷ்டிர அமைச்சர் சகன் புஜ்பல் தெரிவித்திருக்கிறார்.

மகாராஷ்டிரத்தில் குன்பி பிரிவில் மராத்தா சமூகத்தினரை சோ்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் 10 சதவீத இடஒதுக்கீடு கோரி, மும்பையில் உள்ள ஆசாத் மைதானில் கடந்த வெள்ளிக்கிழமை மனோஜ் ஜராங்கே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினாா். அவரின் போராட்டத்துக்கு ஆதரவாக அந்த மாநிலம் முழுவதிலும் இருந்து மராத்தா சமூகத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் அங்கு திரண்டுள்ளனா்.

மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்தும் நோக்கில், அதுதொடா்பான அறிக்கையை சமா்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்தீப் ஷிண்டே தலைமையில் மாநில அரசு குழு அமைத்துள்ளது. இந்நிலையில் மாநில அரசு சாா்பாக ஆசாத் மைதானில் ஜராங்கேயுடன் சந்தீப் ஷிண்டே சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அந்தப் பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் பூதகரமாக அம்மாநிலத்தில் உருவெடுக்கத் தொடங்கிவிட்ட நிலையில், ஓபிசி பிரிவு தலைவர்களை சந்தித்து அமைச்சர் சகன் புஜ்பல் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின், அமைச்சர் சகன் புஜ்பல் செய்தியாளர்களுடன் பேசுகையில், ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், ஓபிசி பிரிவினருக்கன இடஒதுக்கீடை சீர்குலைத்தால், அதன்பின் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்றும் எச்சரித்தார்.

No problem if Marathas get reservation without changing OBC quota: Minister Chhagan Bhujbal after meeting of OBC leaders.

குஜராத்தில் தொடரும் கனமழை! உயர் எச்சரிக்கையில் 113 அணைகள் !

குஜராத் மாநிலத்தில், சுமார் 92.64 சதவிகிதம் பருவமழை பொழிவானது பதிவாகியுள்ள நிலையில், 113 அணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பருவமழையி... மேலும் பார்க்க

மணிப்பூரில் அமைதி திரும்புகிறதா? மத்திய அரசுடன் புதிய ஒப்பந்தம்!

மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் வன்முறையில் முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல வாய்ப்புகள் உள்ளதாகக்... மேலும் பார்க்க

கலவர வழக்கில் இம்ரான்கானின் மருமகன் ஷெர்ஷா கானுக்கு ஜாமீன்!

மே 9 கலவர வழக்குத் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மற்றொரு மருமகன் ஷெர்ஷா கானுக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழ... மேலும் பார்க்க

மமதா பேச்சுக்கு எதிர்ப்பு! மேற்கு வங்க பேரவை அமளியில் பாஜக கொறடா காயம்!

மேற்கு வங்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்ட பாஜக கொறடா சங்கர் கோஷ், அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டபோது காயம் அடைந்ததாக பாஜகவினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.வெளி மாநிலங்களில்... மேலும் பார்க்க

மோடி வெட்கித் தலைகுனிய வேண்டும்: ராகுல்

மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூர் அரசு மருத்துவமனையில் எலிகள் கடித்து இரண்டு பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் ஒரு பாஜக எம்எல்ஏகூட இருக்க மாட்டார்கள்: மமதா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லாத சூழலை பாஜக எதிர்கொள்ளும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் வங்க மொழி பேசும் மக்களுக்க... மேலும் பார்க்க