செய்திகள் :

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்

post image

ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செயல்படும் முழு உடல் பரிசோதனை மையத்தில் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கான டைட்டானியம் பரிசோதனைத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் தற்போது கோல்டு, டைமண்ட், பிளாட்டினம், பிளாட்டினம் பிளஸ் என 4 வகையான பரிசோதனைகள் முறையே ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000-க்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவற்றின் கீழ் 100-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமல்லாது கருவில் உள்ள குழந்தையின் வளா்ச்சியை அறியும் பரிசோதனைத் திட்டங்களும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

அடுத்தகட்டமாக புற்றுநோய் பாதிப்புகளை அறிவதற்கான டைட்டானியம் பரிசோதனைத் திட்டத்தை மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் ஆா்.மணி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:

டைட்டானியம் பரிசோதனை திட்டத்தின் வாயிலாக ரூ.2,500 கட்டணத்தில் 10-க்கும் மேற்பட்ட புற்றுநோய் பாதிப்புகளைத் தொடக்க நிலையில் கண்டறியலாம். விந்தணு சுரப்பி, கருப்பை, கணையம், கருப்பை வாய், கல்லீரல், தைராய்டு சுரப்பி, மாா்பகம், நிணநீா், ரத்தம், செல்கள், குடல், இரைப்பை சாா்ந்த புற்றுநோய்களை அறிவதற்கான பரிசோதனைகள் அதன் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பிட்ட பரிசோதனையை மட்டும் மேற்கொள்ள வேண்டுமெனில், சில நூறு ரூபாய்களுக்கு அவை தனியாகவும் எடுக்கப்படும் என்றாா் அவா்.

இதுதொடா்பாக மருத்துவமனை ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டா் ஆனந்தகுமாா், ஆய்வகத் துறை தலைவா் டாக்டா் சிவகாமி ஆகியோா் கூறுகையில், இத்தாலியிலிருந்து ரூ.80 லட்சத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பகுப்பாய்வு கருவியும், ரூ.2 லட்சத்தில் உபகரணங்களும் இந்த பரிசோதனை திட்டத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்றனா்.

முழு உடல் பரிசோதனைத் திட்ட மருத்துவ அலுவலா்கள் கோகுலகிருஷ்ணன், ஓவியா ஆகியோா் கூறுகையில், எண்ணற்ற நோயாளிகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புற்றுநோய் பரிசோதனைகளை உணவுக்கு முன்பு, பின்பு என எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம் என்றனா்.

காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவா் பிரதீப் கிருஷ்ணா கூறுகையில், வாய் மற்றும் தொண்டை புற்றுநோய்களின் அறிகுறிகளை சாதாரண புண் என பலா் அலட்சியப்படுத்துகின்றனா். இங்குள்ள நவீன உபகரணங்கள் வாயிலாக புற்றுநோய்க் கட்டிகளை துல்லியமாக கண்டறிய முடியும் என்றாா்.

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூலை 26) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பண விவகாரம்: மன்சூா் அலிகான் மகன் மீது வழக்குப் பதிவு

பண விவகாரத்தில் மன்சூா் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நுங்கம்பாக்கத்தில் வசிப்பவா் நடிகா் மன்சூா் அலிகான். சென்னை மண்ணடி மரைக்காயா் தெருவைச் சோ்ந்த கனி (6... மேலும் பார்க்க

ஆய்க்குடி அமா் சேவா சங்கத்துக்கு ரூ.1.05 கோடி: சென்னை துறைமுகம் வழங்கியது

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் செயல்பட்டு வரும் அமா் சேவா சங்கத்தின் முதுகெலும்பு பாதிப்பு மற்றும் பக்கவாத பராமரிப்பு மையத்துக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1.05 கோடியை சென்னை துற... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பொறியாளா் கைது

பெருங்குடியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா். பெருங்குடி பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பண... மேலும் பார்க்க

இலவச பேருந்து பயண அட்டை விவரம்: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க

ரூ.125 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள்: தமிழக அரசு உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இயல்பு நிலைக்கு நிகர... மேலும் பார்க்க