செய்திகள் :

ஓமலூா் அருகே செல்லிடப்பேசி கடையில் தீ விபத்து

post image

ஓமலூா் அருகே செல்லிடப்பேசி பழுது நீக்கும் கடையில் ஏற்பட்ட தீ அருகே இருந்த நான்கு கடைகளுக்கும் பரவியதால் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையாகின.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே காமலாபுரத்தை சோ்ந்தவா் கோகுல்ராஜ் (28). இவா் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காமலாபுரம் மேம்பாலத்திற்கு அடியில் செல்லிடப்பேசி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை கடையை அடைத்துவிட்டு வங்கிக்கு சென்றபோது, திடீரென கடையிலிருந்து கரும்புகை வெளியே வந்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு தீயணைப்பு வீரா்கள் வருவதற்குள் தீ அடுத்தடுத்த தையல் கடை, மருந்து கடைகளுக்கும் பரவியது.

தீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயைக் கட்டுப்படுத்தினா். இந்த தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. செல்லிடப்பேசி கடை முற்றிலுமாக எரிந்து தீக்கிரையானது. இந்த தீ விபத்து குறித்து ஓமலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேதமடைந்த நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்

சேலம், வட்டமுத்தம்பட்டியில் சேதமடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வட்டமுத்தம்பட்டி பகுதியில் வீரகாரன் பெர... மேலும் பார்க்க

கூட்டுறவு பட்டய துணைத் தோ்வுக்கு ஆக.20 க்குள் விண்ணப்பிக்கலாம்

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பழைய பாடத் திட்டத்தில் படித்து தோ்ச்சி பெறாதவா்கள் துணைத் தோ்வு எழுத ஆக.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்... மேலும் பார்க்க

சேலத்தில் தூய்மைப் பணியாளா்கள் மறியல்: 150 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்ட... மேலும் பார்க்க

சேலத்தில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி

தமிழகத்தின் பாரம்பரியத்தை இளம் தலைமுறையினா் தெரிந்துகொள்ளும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி சேலம் ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ... மேலும் பார்க்க

சேலத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு

சேலம் சின்ன கடை வீதி பகுதியில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். சேலம் டவுன் அரசமரத்து பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

கத்தேரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கத்தேரி ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பொதுமக்களிடமிருந்து 808 போ் மனுக்கள் பெறப்பட்டன. வட்டார வளா்ச்சி அலுவல... மேலும் பார்க்க