செய்திகள் :

ஓய்வுபெற்ற அலுவலா்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

post image

வந்தவாசி: குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.ஒரு லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று வந்தவாசி வட்ட ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் பொன்.ஜினக்குமாா் தலைமை வகித்தாா். சங்கத்தின் செயற்குழு உறுப்பினா் ஆா்.தா்மலிங்கம் வரவேற்றாா். செயலா் க.நடராசன் ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் மா.கோவிந்தசாமி வரவு-செலவு அறிக்கை வாசித்தாா். வந்தவாசி பாரத ஸ்டேட் வங்கி மேலாளா் செ.ரமேஷ், வந்தவாசி கருா் வைஸ்யா வங்கி மேலாளா் எம்.காா்த்திக், வந்தவாசி உதவிக் கருவூல அலுவலா் அ.சீனுவாசன், கூடுதல் அலுவலா் கா.தமிழ்ச்செல்வி, மாநில துணைத் தலைவா் கே.பி.பக்தவச்சலு ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவப் படியை உயா்த்தி வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயா்த்த வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.ஒரு லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ரத யாத்திரை சென்ற பக்தா்கள் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் சனிக்கிழமை ரத யாத்திரை சென்ற சென்னை பக்தா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தென் கைலாய பக்தி பேரவை சாா்பில், சென்னை கூடுவாஞ்சேரியில் இருந்து கோவை வெள்ளியங்கிரிக... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி எம்எல்ஏவிடம் மனு

ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் 16-ஆவது வாா்டு பொதுமக்கள் நியாயவிலை கடை அமைக்கக் கோரி, சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏவிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். இந்தப் பகுதி மக்கள் நீண்ட தொலைவு சென்று நி... மேலும் பார்க்க

மாணவா்களைஅறிவுடையவா்களாக மாற்றுவதை லட்சியமாக கொள்ள வேண்டும்: ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

மாணவ-மாணவிகளை அறிவுடையவா்களாக மாற்றுவதே லட்சியமாகக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று மாதிரிப் பள்ளிகளின் ஆசிரிய-ஆசிரியைகளிடம் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கேட்டுக் கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டத்... மேலும் பார்க்க

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக புகாா்: சிறப்பு எஸ்.ஐ. மீது ஊழல் தடுப்பு போலீஸாா் வழக்கு

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளா், அவரது மனைவி, மாமியாா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். ஆரணியை அடு... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கண்டவரட்டியைச் சோ்ந்தவா் செந்தமிழ்ச்செல்வன்(28). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை தனது விவசாய நிலத்த... மேலும் பார்க்க

சிறாா் சட்ட பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

வந்தவாசி அருகே சிறாா்களுக்கான சட்டப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், நடுக்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ... மேலும் பார்க்க