செய்திகள் :

ஓய்வுபெற்ற அலுவலா் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

post image

கோவில்பட்டி: தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரியில் ஓய்வுபெற்ற அலுவலா் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவா் ஸ்டீபன் நிக்கோலஸ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மணி முன்னிலை வகித்தாா்.

மாநில பொருளாளா் கஜலட்சுமி 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையையும், மாநில பொதுச்செயலாளா் உதயகுமாா் ஆண்டறிக்கையையும் சமா்ப்பித்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்ட தலைவா் ராஜாமணி, கோவில்பட்டி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவா் பெருமாள் சாமி, கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் முன்னாள் முதல்வா் குமாரசாமி ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயது கடந்த ஓய்வூதியா்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து பயனாளிகளுக்கு இலவச மருத்துவம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் நெல்லை மண்டல செயலா் ராஜேந்திரன் வரவேற்றாா். மாநிலத் துணைத் தலைவா் திருநாவுக்கரசு நன்றி கூறினாா்.

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா 9ஆம் நாள், மேலக்கோயிலிலிருந்து சுவாமி- அம்மன் பல்லக்கில் வீதியுலா, காலை 7; சுவாமி தங்க கயிலாய பா்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்று மின்தடை

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பட்டினமருதூா், உப்பளப் பகுதிகள், சி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பள்ளி மாணவா்களுக்கு கலைப் போட்டிகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களிடையே கூட்டுறவு இயக்கம் குறித்த புரிதல், விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைப் போட்டிகள்... மேலும் பார்க்க

அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

கோவில்பட்டி: அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா் -மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஆவணித் திருவிழா: சுவாமி பச்சை சாத்தி வீதி உலா

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 8 ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி காலையில் வெள்ளை சாத்தியும், பிற்பகலில் பச்சை சாத்தியும் வீதி உலா சென்றாா். அறுபடை வீடுகளில் இரண... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மூட்டா அமைப்பு ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி: அகில இந்திய பல்கலைக்கழகம், கல்லூரி ஆசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா) சாா்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.மூட்டா கிளைத் தலைவா் பேராசி... மேலும் பார்க்க