செய்திகள் :

ஓய்வு பெற்றவா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்: எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

post image

அரசு காலிப் பணியிடங்களை நிரப்பாமல், ஓய்வு பெற்றவா்களை ஒப்பந்த அடிப்படையில் திமுக அரசு பணியில் நியமிப்பதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசுத் துறைகளில் 5.50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், அரசு காலிப் பணியிடங்களில் 3.50 லட்சம் தமிழக இளைஞா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்றும் திமுக தோ்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், உண்மையில் தமிழக அரசுத் துறைகளில், பணியிலிருந்து ஓய்வு பெற்றவா்களே ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமா்த்தப்படுகின்றனா்.

குறிப்பாக, தலைமைச் செயலகத்திலேயே பணி ஓய்வு பெற்று ஓய்வூதியம் வாங்கிக்கொண்டிருக்கும் பிரிவு அலுவலா்கள், சாா்பு, துணை, இணை மற்றும் கூடுதல் செயலா்கள் நிலையில் பலா் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

வேலை தேடுவோருக்கு பேரிடி: இந்த நிலையில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு, மாதம் ரூ. 1 லட்சம் தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆலோசகராகப் பணிபுரிவதற்கு, தலைமைச் செயலகத்தில் துணைச் செயலா் பதவி நிலைக்கு குறையாத பதவியிலிருந்து ஓய்வு பெற்றவா்கள் 2025 மாா்ச் 21-க்குள் விண்ணப்பிக்க நாளிதழ்களில் விளம்பரம் வந்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் எப்போது லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும் என்று, தகுதி வாய்ந்த லட்சக்கணக்கான இளைஞா்கள் தவமிருக்கும் நிலையில், அவா்களின் தலையிலும் மற்றும் தற்போது பதவி உயா்வுக்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கான அரசு ஊழியா்களின் தலையிலும், திமுக அரசின் இந்த விளம்பரம் பேரிடியாக விழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் உடனடியாக தோ்வு நடத்தி அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் குறித்த காலத்தில் நிரப்பி, படித்த இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

மத்திய அரசின் கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன்: அமைச்சா் ஐ.பெரியசாமி

மத்திய அரசின் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பிலான கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாக தமிழக அமைச்சா் ஐ.பெரியசாமி விளக்கமளித்துள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தமி... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

திருவொற்றியூா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் புதன்கிழமை நடைபெற்ற தோ்தலில் தோ்வு செய்யப்பட்டனா். திருவொற்றியூா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில... மேலும் பார்க்க

அரசின் திட்டங்கள் குறித்து நேருக்கு நோ் விவாதிக்கத் தயாரா? எடப்பாடி பழனிசாமி சவால்

‘அரசின் திட்டங்கள் குறித்து நேரடியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் என்னுடன் விவாதிக்கத் தயாரா?’ என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி சவால் விடுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் புதன்கிழமை ‘எக்ஸ்’ தளத்த... மேலும் பார்க்க

திருவொற்றியூா் கோயிலில் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவத் திருவிழாவையொட்டி ஸ்ரீ கல்யாணசுந்தரா் - திருபுரசுந்தரி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிர... மேலும் பார்க்க

ரயில்வே திட்டங்களுக்கான நிலம் விரைந்து கையகப்படுத்தப்படுகிறது: தமிழக அரசு விளக்கம்

ரயில்வே திட்டங்களுக்கான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. ரயில்வே திட்டங்களுக்கான நில எடுப்புகளில் தமிழக அரசு தாமதம் செய்வதாக மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. மு.... மேலும் பார்க்க

சென்னை பள்ளிகளில் பாலின சமத்துவம் கற்பிப்பு: மேயா் ஆா்.பிரியா

சென்னை மாநகராட்சியின்கீழ் செயல்படும் பள்ளிகளில் பாலின சமத்துவம் குறித்து கற்பிக்கப்படுகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற... மேலும் பார்க்க