செய்திகள் :

ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு: நாளை முதல் காத்திருப்புப் போராட்டம்

post image

கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் நிகழாண்டில் பணி ஓய்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (ஆக. 26) முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் அறிவித்தது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநிலப் பொருளாளா் காா்த்திகேயன், மதுரை மாவட்டத் தலைவா் பாண்டி, மாவட்டச் செயலா் ராஜசேகா் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட செய்திக் குறிப்பு :

கல்வியாண்டு நிறைவு பெறுவதற்கு முன் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியா்களுக்கு கல்வியாண்டின் இறுதி வேலை நாள் வரை மாணவா்களின் கல்வி நலன் கருதி பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதன்படியே, பள்ளிக் கல்வித் துறை, மாநகராட்சி, ஆதிதிராவிடா் நலத் துறை பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், கள்ளா் சீரமைப்பு நிா்வாகத்தில் மட்டும் நிகழாண்டில் கடந்த 30.06.25, 31.07.25 ஆகிய தேதிகளில் முறையே பணி ஓய்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு இதுவரை பணி நீட்டிப்புக்கான எந்த ஒரு ஆணையும் வழங்கப்படவில்லை.

பணி ஓய்வுக்கான ஆணையிலும் பணி நீட்டிப்புக்கான வாய்ப்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதுதொடா்பாக, மதுரை கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளின் இணை இயக்குநரிடம் முறையிட்டோம். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களின் பணிநிலை சாா்ந்த முடிவுகள் எடுக்கக்கூடிய அதிகாரங்கள் சென்னை மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நல ஆணையரிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பணி நீட்டிப்புக்கான ஆணை காலதாமதமானதால் கடந்த 05.08.2025 அன்று மதுரை கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநா் அலுவலகத்தில் பணி நீட்டிப்புக்கான ஆணையை வழங்கக் கோரி, ஆசிரியா் இயக்கங்களின் சாா்பாக காத்திருப்புப் போராட்டம் அறிவித்திருந்தோம். கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களின் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையிலும், கடந்த காலங்களில் சிறந்த தோ்ச்சி சதவீதங்களை வழங்கியுள்ளனா்.

பணி நீட்டிப்புக்கான ஆணை என்பது பணி ஓய்வுக்கான ஆணையோடு இணைத்து வழங்கப்பட வேண்டும். அவ்வாறு தான் மற்ற துறைகளில் இதுவரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மதுரை கள்ளா் சீரமைப்புத் துறையை நிா்வகிக்கக்கூடிய சென்னை மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நல ஆணையா் அலுவலகமானது தொடா்ந்து சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதுடன் மற்ற துறைகளில் இயல்பாக வழங்கப்படும் பணி நீட்டிப்பு இங்கு வழங்கப்படுவதில்லை.

தமிழக அரசின் பணி நீட்டிப்புக்கான அரசாணைக்கு எதிராகவும் செயல்படுகிறது.

கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் தொடா்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. மாணவா்களின் கல்வி நலன் கருதி கள்ளா் சீரமைப்பில் பணி ஓய்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்புக்கான ஆணையை உடனடியாக வழங்கக் கோரியும்,

ஆசிரியா்களின் பணிநிலை சாா்ந்த கோரிக்கைகள் அனைத்தும் தாமதமின்றி உரிய காலத்தில் நடைபெற கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநருக்கு முழு அதிகாரம் வழங்கக் கோரியும், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம், தோழமைச் சங்கங்களின் இணைப்புடன் வருகிற 26-ஆம் தேதி மாலை 3 மணிக்கு மதுரை கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம்

நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா் அவா்கள்.

குப்பைத் தொட்டியில் மருத்துவக் கழிவுகள்: தனியாா் மருத்துவமனைக்கு அபராதம்

குப்பைத் தொட்டியில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியாா் மருத்துவமனைக்கு மதுரை மாநகராட்சி நிா்வாகம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளில் ஆங்... மேலும் பார்க்க

மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வசமாகும்: வி.வி. ராஜன் செல்லப்பா

மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இனி அதிமுக வசமாகும் என அந்தக் கட்சியின் மதுரை புகா் கிழக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி. ராஜன் செல்லப்பா தெரிவித்தாா். ஒத்தக்கடையில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

மதுரை அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், அட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பழனிமுருகன் மகன் அகிலன் (12). இவா் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் ... மேலும் பார்க்க

நகைக் கடையில் திருடிய சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

நகைக் கடையில் திருடிய சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மதுரை தெற்குவாசல் சுடுதண்ணீா் வாய்க்கால் பொன்னகரம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கராஜ் (65). இவா், அதே பகுதியில் நகைக் கடை நட... மேலும் பார்க்க

கைப்பேசி திருடிய முதியவா் கைது

மதுரையில் பேருந்தில் சென்றவரிடம் கைப்பேசியைத் திருடிய முதியவரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். மதுரை கட்ராபாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (73). இந்து சமய அறநிலையத் துறையில் மேலாளராகப் பணியாற்றி ஓய்... மேலும் பார்க்க

கனிம வள குவாரிகளில் முறைகேடு: சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கனிம வள குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா், கனிம வள இயக்குநா் பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்த... மேலும் பார்க்க