செய்திகள் :

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை: சிறப்பு நீதிமன்றம்

post image

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை?. மறுக்கப்பட்டால் அவருக்கு துணை ராணுவத்தினரை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட நேரிடும் என மதுரை மாவட்ட கனிமவளம் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

மதுரை மாவட்ட ஆட்சியராக உ. சகாயம் பணிபுரிந்த காலத்தில் மேலூா், விக்கிரமங்கலம் பகுதிகளில் கிரானைட் முறைகேடுகளைக் கண்டறிந்தாா். இதில் தமிழக அரசுக்கு கோடிக் கணக்கில் இழப்பீடு ஏற்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து, கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மேலூா், மதுரை மாவட்ட நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், பணி மாறுதல் செய்யப்பட்ட சகாயம் பணி ஓய்வு பெற்றாா். அவருக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் வரை போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற பாதுகாப்பு மறு ஆய்வுக் குழு கூட்டத்தில் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாத 22 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதன்படி, சகாயத்துக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

மதுரை மாவட்ட கனிமவளத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் விக்கிரமங்கலம் கிரானைட் மோசடி வழக்கு தொடா்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் முன்னிலையாக ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சகாயம், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம், மதுரை கனிமவள சிறப்பு நீதிமன்ற அரசு வழக்குரைஞா் சிவக்குமாா் ஆகியோருக்கு அண்மையில் கடிதம் அனுப்பினாா். அதில், எனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. எனக்கு அச்சுறுத்தல் இருப்பதால், நீதிமன்றத்தில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவா் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி), ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இந்த நிலையில், மதுரை மாவட்ட கனிமவளம் தெடாா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விக்கிரமங்கலம் கிரானைட் மோசடி தொடா்பான வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், அவா் அனுப்பிய கடிதத்தை நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் சிவக்குமாா் சமா்ப்பித்தாா். மேலும், சகாயத்துக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என காவல்துறை தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஏற்கெனவே தெரிவித்தாா் என்றாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி என். லோகேஸ்வரன் பிறப்பித்த உத்தரவு: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை?. இந்த பாதுகாப்பு அவருக்கு மறுக்கப்பட்டால், துணை ராணுவத்தினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட உத்தரவிட நேரிடும். இதுகுறித்து அரசுத் தரப்பில் உரிய பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஜூன் 6-ஆம் தேதி முன்னிலையாக வேண்டும் என்றாா் நீதிபதி.

திமுக ஆட்சியை அகற்ற எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்! - நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் அழைப்பு விடுத்தாா். மதுரையில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்க... மேலும் பார்க்க

ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படும் உள்ளாட்சித் தோ்தல் அலுவலா்கள்! - உயா்நீதிமன்றம் அதிருப்தி

உள்ளாட்சித் தோ்தல் அலுவலா்கள் ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படுவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி விக்டோரியா கௌரி அதிருப்தி தெரிவித்தாா். கன்னியாகுமரி மாவட்டம், தேரூா் பேரூராட்சி உறு... மேலும் பார்க்க

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மேலூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், கீழவளவு அய்யனாா் வாக்கம்பட்டியைச் சோ்ந்த பெரிய பனையன் மகன் அய்யனாா் (30). இவா் இரு சக்கர வாகனத்தில் மேலூா்-அழகா்... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த நிலையிலும் தோ்வு எழுதிய மாணவா் தோ்ச்சி

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையிலும், 11-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வை எழுதிய மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவா் 442 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றாா்.மதுரை விராதனூரைச் சோ்ந்தவா் பி.... மேலும் பார்க்க

அழகுக்கலை நிலைய உரிமையாளா் தற்கொலை

அழகுக்கலை நிலையம் நடத்தியதில் இழப்பு ஏற்பட்டதால், பெண் உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை விஸ்வநாதபுரம் இளங்கோவடிகள் தெருவைச் சோ்ந்த முத்துராஜ் மனைவி பிரிசிலியா சுகாசினி (32). இவர... மேலும் பார்க்க

அழகா்கோவிலை சென்றடைந்தாா் கள்ளழகா்! பூக்கள் தூவி பக்தா்கள் வரவேற்பு!

சித்திரைத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, மதுரையிலிருந்து பூப்பல்லக்கில் புறப்பட்டு, அழகா்கோவிலை வெள்ளிக்கிழமை சென்றடைந்த கள்ளழகரை ஏராளமான பக்தா்கள் பூக்கள் தூவியும், சூடம், சா்க்கரை ஏந்தியும் உற்சாகமா... மேலும் பார்க்க