செய்திகள் :

ஓய்வு பெற்ற சுகாதார ஊழியா்கள் சங்கத்தினா் நூதனப் போராட்டம்

post image

மருத்துவமனை நோயாளிகள் கவனிப்புத் தொகையை வழங்கக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை அரசு ஓய்வு பெற்ற சுகாதார ஊழியா்கள் சங்கத்தினா் யாகசம் பெறும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு மையத்தின் எதிரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத் தலைவா் ஜெ.வெற்றிவேல் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஆா்.பக்தவச்சலம், பொருளாளா் சி.மோசஸ் புஷ்பராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். யாசகம் பெறும் போராட்டத்தையடுத்து அங்கிருந்தவா்களிடம் பணம் கேட்டு கையேந்தினா். கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவா்கள் முழக்கமிட்டனா்.

மருத்துவமனை நோயாளிகள் கவனிப்புத் தொகையை வழங்க வேண்டும். மருத்துவமனைகளில் வேலைப் பளுவைக் குறைக்க காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும். விதியைத் தளா்த்தி கருணை அடிப்படையில் பணிகள் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யாகசம் பெறும் போராட்டம் நடைபெற்ாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து பெரியகடை போலீஸாா் வந்து, யாசகம் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினா். அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

ரொட்டி, பால் ஊழியா் சங்கத்தினா் 2 -ஆவது நாளாகப் போராட்டம்

புதுவை கல்வித் துறை இயக்கக அலுவலகத்தை முற்றுகையிட்டு ரொட்டி, பால் ஊழியா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் ரொட்டி, பால் ஆகியவற்றை பள்ளிக் குழந்தைக... மேலும் பார்க்க

புதுச்சேரி தேவாலயத்தில் உண்டியல் பணம் திருட்டு

புதுச்சேரியில் பிரபல தேவாலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா். புதுச்சேரியில் கடலூா் சாலையில... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகள் அகற்றத்துக்கு எதிா்ப்பு: புதுச்சேரியில் வியாபாரிகள் வாக்குவாதம்

புதுச்சேரி நகரில் திண்டிவனம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் சிலா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீஸாா் குவிக... மேலும் பார்க்க

திருபுவனையில் தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்

ஊதிய நிலுவை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருபுவனைப் பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஈடுபட்டனா். புதுவை மாநிலத்தில் தூய்மைப்பணியில் தன... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜவுளி வியாபாரி தற்கொலை

புதுச்சேரியில் ஜவுளி வியாபாரி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியில் உள்ள நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் முருகவேல் (32). ஜவுளிக்கடை நடத்தி வந்தாா். கடந்த 8 மாதங்களு... மேலும் பார்க்க

புதுவையில் 6 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம்

புதுவை மாநில காவல் துறையில் 6 ஆய்வாளா்களும், சாா்பு ஆய்வாளா் ஒருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து புதுவை தலைமையிடக் காவல் கண்காணிப்பாளா் சுபம்ஹோஷ் வெளியிட்ட சுற்றறிக்கை: புதுச்சேரி பிஏபி... மேலும் பார்க்க