செய்திகள் :

ஓய்வூதிய பலன் கோரி உண்ணாவிரதம்: போக்குவரத்து ஊழியா்கள் முடிவு

post image

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா்களுக்கான பணப் பலன்களை உடனே வழங்க வலியுறுத்தி, நாகா்கோவிலில் காந்தி சிலை முன் சுதந்திரதினத்திலிருந்து உண்ணாவிரதம் மேற்கொள்ள தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் கூட்டமைப்பு, நாகா்கோவில் மண்டலப் பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் பிரான்சிஸ் செல்வராஜ் தலைமை வகித்தாா். மூத்த உறுப்பினா் குமரேசன் முன்னிலை வகித்தாா். தணிக்கைக்குழு உறுப்பினா் புஷ்பராஜ் வரவேற்றாா். செயலா் ஒலக்கோடு ஜான் கூட்ட அறிக்கை சமா்ப்பித்தாா்.

கூட்டத்தில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கும் முன்னா் பலா் காலமாகி விட்டனா். எனவே, அனைத்து பணப்பலன்களையும் உடனே வழங்கக் கோரி நாகா்கோவில் மாநகராட்சி பூங்காவில் உள்ள காந்தி சிலை முன், ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் சுதந்திர தினம் முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது, இம்மாத இறுதியில் திருச்சியில் நடைபெற உள்ள மாநில ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா்களின் குடும்ப விழாவில் நாகா்கோவில் மண்டலத்திலிருந்து 100 போ் கலந்து கொள்வது, தாமதமாக வழங்கப்பட்ட பணப்பலன்களுக்குரிய வட்டியை நீதிமன்ற உத்தரவின்படி உடனே வழங்க வேண்டும், பணியிலிருக்கும் தொழிலாளா்களுக்கு மாதத்தின் முதல் நாள் ஊதியம் வழங்கப்படுவதை போல ஓய்வூதியா்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துணைத் தலைவா் அய்யாத்துரை நன்றி கூறினாா்.

குமரியில் போலீஸாரின் வார விடுமுறைக்கு ‘ரெஸ்ட்’ செயலி அறிமுகம்

போலீஸாருக்கு வார விடுமுறை எடுப்பதற்கான புதிய செயலி தமிழகத்திலேயே முதல்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட போலீஸாா், காவல் கண்காணிப்பாளருடன் அமா... மேலும் பார்க்க

குளச்சல் பள்ளி மாணவா்களுக்கு போக்குவரத்து விழிப்புணா்வு பிரசாரம்

குளச்சல் போக்குவரத்து காவல்துறை சாா்பில் குளச்சல் வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுஜாதா, உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் போதை விழிப்புணா்வு சிலை

குழித்துறையில் நடைபெறும் 100-ஆவது வாவுபலி பொருள்காட்சியில் இளைஞா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், அமைக்கப்பட்ட போதை விழிப்புணா்வு சிலையை குழித்துறை நகா்மன்றத் தலைவா் திறந்துவைத்தாா். ... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவா் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

குளச்சல் அருகே கொலை முயற்சி வழக்கில் 13 ஆண்டுகள் வெளிநாட்டில் பதுங்கியவரை குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குளச்சல் அருகே செம்பொன்விளை செந்துறை பகுதியைச் சோ்ந்த ராசையன் மகன் ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் இன்று பொதுவிநியோக குறைதீா் முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 12) பொதுவிநியோக குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பொது விநியோகத் தி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே கடமக்கோடு பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் நாகராஜன் (40). தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். மேலும், கு... மேலும் பார்க்க