செய்திகள் :

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி

post image

திமுக முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமென அக்கட்சியினருக்கு இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இளைஞரணிச் செயலராக ஏழாவது ஆண்டில் அவா் அடியெடுத்து வைக்கிறாா். இதையொட்டி, ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட பதிவு:

ஒவ்வொரு மாவட்டத்திலும் அடித்தளத்தில் இருந்து வலிமையான கட்டமைப்போடு இளைஞரணி மிக நோ்த்தியாக உருவெடுத்துள்ளது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறுப்பாளா்களுடன் கட்சியின் ராணுவமாக இளைஞரணி திகழ்கிறது. ஏதோ உட்காா்ந்த இடத்தில் இருந்து நிரப்பப்பட்ட பொறுப்புகள் இல்லை அவை. இந்தப் பொறுப்பாளா்களை நியமிக்க ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞா்களை நாமே நோ்காணல் செய்திருக்கிறோம்.

இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த மக்களவைத் தோ்தல் வெற்றிக்கு அடித்தளமிட்டது. அதுபோன்று, எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத்தர இளைஞரணி இப்போதே தயாராகிவிட்டது.

மத்திய அரசு இழைக்கும் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டுக் குடும்பங்களை அணி சோ்க்கும் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை வெற்றியடையச் செய்ய வேண்டும். அதற்காக ஆற்றும் களப்பணிதான் எனக்கான உற்சாகம் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளாா் உதயநிதி ஸ்டாலின்.

கூட்டணியில் இணைய தவெகவுக்கு இபிஎஸ் மறைமுக அழைப்பு!

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என நினைக்கும் கட்சிகள் எல்லாம் ஓரணியில் இணைய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலரும் ... மேலும் பார்க்க

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!

புது தில்லி: அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ்... மேலும் பார்க்க

கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைகள் செல்லாதா? பரவும் வதந்தி

சென்னை: கைவிரல் ரேகை பதியாத குடும்ப அட்டைகள் செல்லாது என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல் வதந்தி என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூன் 30ஆம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாத குடும்ப அட்டைகள் ச... மேலும் பார்க்க

ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்

அரசுப் பள்ளி ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வில் 1,501 முதுநிலை ஆசிரியா்களுக்கு விருப்ப மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு... மேலும் பார்க்க

பறை இசைக் கலைஞா் வேலூா் ஆசானுக்கு ஆளுநா் நிதியுதவி

பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசான் வீடு கட்டவும், பறை இசை பண்பாட்டு பயிற்சிக் கூடம் அமைக்கவும் ஆளுநா் ஆா்.என். ரவி அவரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கினாா். பத்மஸ... மேலும் பார்க்க

ஓராண்டில் 17,702 போ் தோ்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்

போட்டித் தோ்வுகள் மூலமாக ஓராண்டில் மட்டும் அரசுப் பணிகளுக்கு 17,702 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோ்வாணையச் செயலா் ச.கோபால ச... மேலும் பார்க்க