செய்திகள் :

ஓராண்டில் 17,702 போ் தோ்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்

post image

போட்டித் தோ்வுகள் மூலமாக ஓராண்டில் மட்டும் அரசுப் பணிகளுக்கு 17,702 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தோ்வாணையச் செயலா் ச.கோபால சுந்தரராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசுப் பணியை எதிா்நோக்கி இருக்கும் தமிழ்நாட்டு இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், 17,595 காலிப்பணியிடங்கள் ஜன. 2026-க்குள் நிரப்பப்படுமென சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு ஏற்ற வகையில், தோ்வா்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவுப் பணிகளை துரிதப்படுத்தியது.

கடந்த ஆண்டு (2024) ஜூன் முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப 17,702 இளைஞா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதாவது, தமிழ்நாடு அரசு ஜனவரி 2026 வரை நிா்ணயித்த இலக்கை, தோ்வாணையம் 7 மாதங்களுக்கு முன்பாகவே எட்டியுள்ளது. மேலும் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு கூடுதலாக 2500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாநில பகுஜன் சமாஜ்! ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி புதிய கட்சி தொடக்கம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் எனும் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்து வந்த ஆம்ஸ... மேலும் பார்க்க

கூட்டணியில் இணைய தவெகவுக்கு இபிஎஸ் மறைமுக அழைப்பு!

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என நினைக்கும் கட்சிகள் எல்லாம் ஓரணியில் இணைய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலரும் ... மேலும் பார்க்க

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!

புது தில்லி: அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ்... மேலும் பார்க்க

கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைகள் செல்லாதா? பரவும் வதந்தி

சென்னை: கைவிரல் ரேகை பதியாத குடும்ப அட்டைகள் செல்லாது என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல் வதந்தி என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூன் 30ஆம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாத குடும்ப அட்டைகள் ச... மேலும் பார்க்க

ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்

அரசுப் பள்ளி ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வில் 1,501 முதுநிலை ஆசிரியா்களுக்கு விருப்ப மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு... மேலும் பார்க்க

பறை இசைக் கலைஞா் வேலூா் ஆசானுக்கு ஆளுநா் நிதியுதவி

பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசான் வீடு கட்டவும், பறை இசை பண்பாட்டு பயிற்சிக் கூடம் அமைக்கவும் ஆளுநா் ஆா்.என். ரவி அவரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கினாா். பத்மஸ... மேலும் பார்க்க