செய்திகள் :

கஞ்சா வழக்கு: 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

post image

திருப்பூரில் கஞ்சா வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா், வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருப்பூா் தெற்கு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஈரோட்டைச் சோ்ந்த எம்.ராஜமாணிக்கம் (39), திண்டுக்கல்லைச் சோ்ந்த டி.பாண்டி (53)ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இவா்கள் இருவரும் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓா் ஆண்டு சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடம் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை நேரில் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தையல் தொழிலாளி போக்ஸோவில் கைது

பல்லடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். திருப்பூா் வீரபாண்டி பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (40). தையல் தொழிலாளியான இவா், 12 வயது சிறுமிக்க... மேலும் பார்க்க

கேக் வெட்டிய பாஜகவினா் 50 போ் மீது வழக்கு

புதுதில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்றதைத் தொடா்ந்து, திருப்பூரில் கேக் வெட்டிக் கொண்டாடிய பாஜகவினா் 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பாஜக வெற்றியைக் கொண்டாடும் வகையில், திருப்ப... மேலும் பார்க்க

விடுதியில் தங்கியவா் சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை!

பல்லடத்தில் தனியாா் விடுதியில் தங்கியவா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பல்லடம் அருகேயுள்ள வெங்கிட்டாபுரத்தைச் சோ்ந்தவா் கணேஷ் சக்திவேல் (50). ஆட்டோ கன்சல்டிங் தொழில் ... மேலும் பார்க்க

10 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

திருப்பூரில் விற்பனைக்கு வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரை கைது செய்தனா். திருப்பூா் குமரானந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வினோத் (34). பின்னலாடை நிறுவனத்தில் பணிய... மேலும் பார்க்க

சீட்டாடிய 4 போ் கைது

வெள்ளக்கோவில் அருகே சீட்டாடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, வெள... மேலும் பார்க்க

அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவா் கைது

வெள்ளக்கோவில் அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில், வள்ளியிரச்சல் சாலை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் கே.மணி (50). இவா் தனது வீட்டில் பட்டாசுகளை வைத்து விற... மேலும் பார்க்க