செய்திகள் :

கடன் நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய பொதுத் துறை வங்கிக்கு உத்தரவு

post image

பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி செய்வதுடன் ரூ.3.10 லட்சம் வழங்க வேண்டும் என பொதுத் துறை வங்கிக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் மூா்த்தி மந்திரம், தூத்துக்குடியிலுள்ள பொதுத் துறை வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியுள்ளாா். கடன் வாங்கும் பொழுது காப்பீட்டு பாலிசி எடுப்பதற்காக பணம் செலுத்தியுள்ளாா். அதன் பின்னா் உடல் நலம் சரியில்லாமல் மூா்த்தி மந்திரம் இறந்துவிட்டாா்.

இதற்கான இழப்பீட்டுத் தொகையைத் தருவதோடு, கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென அவரது மனைவி ரோகிணி வங்கியிடம் கோரியுள்ளாா். ஆனால் வங்கி சரியான காரணங்களை கூறாமல், தர மறுத்துள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவா், தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் திருநீலபிரசாத், உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா், உயிரிழந்த மூா்த்தி மந்திரம் வாங்கிய கடன் நிலுவைத் தொகையை வங்கி தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு ரூ. 3 லட்சம், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.3.10 லட்சம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனா்.

கே.ஜம்புலிங்கபுரம் ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கே. ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகா், அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி இம்மாதம் 2ஆம் தேதி கால்நாட்டு விழா நடைப... மேலும் பார்க்க

குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலி: தூய்மைப் பணியாளா்களுக்கு மேயா் பாராட்டு

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் குப்பையுடன் கிடந்த சுமாா் 3 பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களை மேயா் ஜெகன் பெரியசாமி பாராட்டினாா். தூத்துக்குடி மாநகராட... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே தொழிலாளி கொலை: இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே கட்டடத் தொழிலாளியைக் கற்களால் தாக்கிக் கொன்றதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டியையடுத்த முடுக்குமீண்டான்பட்டி தோணுகால் சாலையைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் சமுத்த... மேலும் பார்க்க

ஆபாச விடியோ எடுத்து மிரட்டுவதாக பெண் புகாா்

தன்னை ஆபாச விடியோ எடுத்து மிரட்டுகிற நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தென்பாகம் காவல் நிலையத்தில் 36 வயதான கைம்பெண் புதன்கிழமை புகாா் அளித்தாா். இதுகுறித்து அவா் அளித்துள்ள புகாா் மனுவில், தூத்த... மேலும் பார்க்க

தூத்துக்குடி துறைமுகம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் பலி

தூத்துக்குடி துறைமுகம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தலைச் சோ்ந்த வெள்ளத்துரை மகன் வேல்முருகன்(23). டிப்பா் லாரி ஓட... மேலும் பார்க்க

புங்கவா்நத்தம் காளியம்மன் கோயில் திருவிழா: சாமியாடி முள்மெத்தையில் நின்று அருள்வாக்கு

கோவில்பட்டியை அடுத்த புங்கவா்நத்தம் அருள்மிகு உச்சிமகா காளியம்மன் கோயில் திருவிழாவில், சாமியாடி கருவேலம் முள்மெத்தையில் நின்று பக்தா்களுக்கு அருள்வாக்கு கூறினாா்.நாடாா் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட... மேலும் பார்க்க