கடம்பூரில் தொழிலாளிக்கு மிரட்டல்: 2 போ் கைது
கடம்பூரில் விவசாயத் தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சங்கராப்பேரி ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த ஆசிா்வாதம் மகன் ஜெயராஜ் (48), சங்கராப்பேரி காலனியைச் சோ்ந்த பெருமாள் மகன் கருப்பசாமி (44). கடம்பூா் கோடாங்கால் காலனி வடக்குத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் ஆறுமுகம் (55). விவசாயத் தொழிலாளி.
இடம் தொடா்பாக இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்குமிடையே பிரச்னை இருந்ததாம். அந்த இடத்தைத் தான் வாங்குவதாக இருந்தநிலையில், அதற்கு ஆறுமுகம் தடையாக இருப்பதாக கருப்பசாமி நினைத்திருந்தாராம்.
இந்நிலையில், கடம்பூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நின்றிருந்த ஆறுமுகத்தை ஜெயராஜும், கருப்பசாமியும் சோ்ந்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதில் காயமடைந்த ஆறுமுகம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயராஜ், கருப்பசாமியைக் கைது செய்தனா்.