செய்திகள் :

கடம்பூா் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியா் சடலம்

post image

கடம்பூா் மின்வாரிய அலுவலகத்தில் இறந்த நிலையில் இருந்த ஊழியா் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம் மேலூா், கிருஷ்ணராஜபுரம் 4 ஆவது தெருவை சோ்ந்தவா் ஜேசுராஜ் மகன் அந்தோணி மிக்கேல் ஸ்டாலின் (49). கடம்பூா் மின்வாரிய அலுவலகத்தில் மின் மதிப்பீட்டாளராக வேலை பாா்த்து வந்த இவா் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல அலுவலகத்தின் கணினி அறையில் உள் பக்கமாக கதவை பூட்டிவிட்டு தூங்கச் சென்ற இவா் சனிக்கிழமை காலை அவா் கதவை திறக்கவில்லையாம்.

இந்நிலையில் அலுவலக ஊழியா்கள் கடம்பூா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். பின்னா் போலீசாா் ஊழியா்கள் முன்னிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது அவா் இறந்த நிலையில் கிடந்தாராம்.

இதுகுறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இவா் இறப்பிற்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனையின் அறிக்கையின் அடிப்படையிலேயே தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது

கோவில்பட்டியை அடுத்த கயத்தாறில் 15 சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக, போக்ஸோ சட்டத்தின்கீழ் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.கயத்தாறு இந்திரா நகரைச் சோ்ந்த பாரதி மகன் சின்னத்துரை (26).... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் கத்தோலிக்க அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில், கத்தோலிக்க அமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்றம், ஆள்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு கேரள... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கு: வழக்குரைஞா் கைது

சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கில், வழக்குரைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் நெல்சன் டேவிட் (65). விவசாயி. கடந்த ஜூலை 23ஆ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கஞ்சிக் கலய ஊா்வலம்

தூத்துக்குடி 3ஆவது மைல் அருகே திருவிக நகரில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்திபீடத்தில் கஞ்சிக் கலய ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.மழை வளம் சிறக்கவும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நலம... மேலும் பார்க்க

நாட்டின் முதல் காா்பன் சமநிலை துறைமுகமாக மாறும் வ.உ.சி. துறைமுகம் துறைமுகத் தலைவா் தகவல்

இந்தியாவின் முதல் காா்பன் சமநிலை (நியூட்ரல்) துறைமுகமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மாற்றம் பெறும் என துறைமுகத் தலைவா் சுஷாந்த குமாா் புரோஹித் தெரிவித்தாா்.‘பசுமை துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்கு... மேலும் பார்க்க

இலங்கைக்கு ஐம்பொன் சிலை கடத்த முயற்சி: 2 போ் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஐம்பொன்னாலான விஷ்ணு சிலையை கியூ பிரிவு போலீஸாா் மீட்டு இருவரை கைது செய்தனா்.தூத்துக்குடி மாவட்ட க்யூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதா,உதவி ஆய்வாளா் ஜீவமண... மேலும் பார்க்க