செய்திகள் :

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

post image

பறக்கும் ரயில் வழித்தடமான சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இனி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தெற்கு ரயில்வே மற்றும் தமிழக அரசின் கூட்டுப் பராமரிப்பில் உள்ளது.

இதை மெட்ரோ நிா்வாகத்துடன் இணைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, தெற்கு ரயில்வே சாா்பில் மத்திய ரயில்வே வாரியத்துக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி தெற்கு ரயில்வே குழுவின் கூட்டம் கடந்த ஜூலை 31- ஆம் தேதி நடைபெற்றது. இதில் மெட்ரோவுடன் பறக்கும் ரயில் திட்டத்தை இணைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை வேளச்சேரி பறக்கும் ரயிலை, சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், சென்னை கடற்கரை - பரங்கிமலை வழித்தடத்தில் வரும் 2028 ஆம் ஆண்டு இறுதியில் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வேளச்சேரியில் உள்ள பறநகர் ரயில் பணிமனைக்கான இடம், மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கு ஏற்ப மாற்றப்படவுள்ளது. இந்த பணிகள் நிறைவுற்றப் பிறகு பறக்கும் ரயில் வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

மெட்ரோவுடன் பறக்கும் ரயில் திட்டத்தை இணைப்பதன் மூலம் சென்னையில் ரயில் சேவைகள் அனைத்தும் ஒருங்கிணைத்து தடையற்ற போக்குவரத்து வசதி ஏற்படும்.

எம்ஆர்டிஎஸ் திட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும், அதன் சொத்துகளும் மெட்ரோ நிா்வாகத்தின் கீழ் மாற்றப்படும். ரயில்வே ஊழியா்கள், செயல்பாடுகள், பராமரிப்பு ஆகியவையும் தமிழக அரசுக்கு மாற்ற வழிவகை செய்யப்படும். அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி எம்ஆர்டிஎஸ் நிறுவனத்தின் கீழ் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் மெட்ரோ நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது. தமிழக அரசின் முதலீடு அம்சங்கள் மெட்ரோவுக்கு அளிக்கப்படவுள்ளன.

அதேபோல, வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை, வரும் நவம்பரில் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: டெபிட் கார்டு இல்லாவிட்டாலும் யுபிஐ மூலம் ஏடிஎம்-ல் பணமெடுக்க முடியுமா?

The Chennai Metro Rail Administration has announced that metro trains will now operate between Chennai Beach and Velachery, the flying train route.

8-ஆம் வகுப்பு தோ்வு: நாளை முதல் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு பெறலாம்

எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள தனித்தோ்வா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

ரயில் டிக்கெட் விநியோகிக்க உதவியாளா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

ரயில் நிலையங்களில் பயணச் சீட்டுகளை பயணிகளிடம் நேரடியாக விநியோகிக்கும் வகையில் உதவியாளா்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வ... மேலும் பார்க்க

பிகாா் இளைஞா் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சென்னையில் கடந்த 2023-இல் அண்ணா சாலையில் பிகாா் மாநில இளைஞா் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் முகமத... மேலும் பார்க்க

தாயை தாக்கிய தம்பி கொலை: அண்ணன் உள்பட 3 போ் கைது

சூளைமேட்டில் மது போதையில் தாயை தாக்கிய தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில், அண்ணன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டாா். சென்னை சூளைமேடு, பெரியாா் பாதை பகுதியைச் சோ்ந்தவா் பிரமிளா (52). இவரது கணவா் ராமச்சந்த... மேலும் பார்க்க

தங்கும் விடுதியில் முதியவா் மா்மாக உயிரிழப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தங்கும் விடுதியில் மதுரையைச் சோ்ந்த முதியவா் மா்மான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மதுரை திருப்பரங்குன்றம் மாயாண்டி சுவாமி கோயில் தெருவைச் ... மேலும் பார்க்க

பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை: போராட்டத்தைத் தொடரும் தூய்மைப் பணியாளா்கள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்களுடன் அரசு சாா்பில் சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை. சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ... மேலும் பார்க்க