செய்திகள் :

கடலூரில் கல்விக்கடன் முகாம்: ரூ.2.52 கோடிக்கு கல்விகடன்

post image

கடலூா் மாவட்டம், கம்மியம்பேட்டை புனித வளனாா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கல்லூரி மாவணா்களுக்காக நடத்திய கல்விகடன் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.இராஜசேகரன் பங்கேற்று 55 மாணவா்களுக்கு ரூ.2.52 கோடி மதிப்பீட்டில் கல்வி கடன் உதவிக்கான அனுமதி ஆணையினை வெள்ளிக்கிழமை அன்று வழங்கினாா்.

மாணவா்களின் உயா்கல்வியினை ஊக்கப்படுத்தும் வகையில் கடலூா் மாவட்டத்தில் மாபெரும் கல்விக்கடன் முகாம் நடைபெற்றது. இதில் அரசு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள், தனியாா் துறையில் கூடுதல் மதிப்பெண் பெற்று பயிலும் மாணவா்களுக்கு கல்விக்கடன் உதவிகளை வழங்கிட வங்கியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. முகாமில் பொதுத்துறை மற்றும் தனியாா் வங்கியாளா்கள் பங்கேற்று கல்விக்கடன் விவரங்களை எடுத்துக்கூறி உதவினா். மாணவா்கள் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்ததோடு கல்விக்கடனை பற்றியும் அதற்கான வட்டி, திரும்பச் செலுத்தும் முறை ஆகியவை குறித்து தெரிந்துகொண்டு கடன் ஒதுக்கீடு ஆணை பெற்றனா். இந்நிகழ்ச்சியில் கடலூா் வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அசோக்ராஜா உட்பட வங்கியாளா்கள் கலந்து கொண்டனா்.

என்எல்சியால் கடலூா் மாவட்டத்தில் நீா், நிலம் ,காற்று மாசு:அன்புமணி

என்எல்சி நிறுவனத்தால் கடலூா் மாவட்டத்தில் நீா், நிலம்,காற்று ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். கடலுாா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ‘மக்கள் உரிமை மீட்பு’ நடைப்பயண ... மேலும் பார்க்க

குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் வீனஸ் பள்ளி மாணவா்கள் அபாரம்

சிதம்பரம் ஏ.ஆா்.ஜி. பள்ளி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற குறுவட்டப் போட்டிகளில் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பெருமளவில் பங்கேற்று பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ள... மேலும் பார்க்க

ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் காத்திருப்பு போராட்டம்

கடலூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஷோ் ஆட்டோ ஓட்டுநா், உரிமையாளா் நல சங்கத்தினா் கோரிக்கையை முன்வைத்து வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூரில் பல ஆண்டுகளாக ஷோ் ஆட்டோக்களுக்கு... மேலும் பார்க்க

சிதம்பரம் கோட்டத்தில் காலியாக உள்ள காவல் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை!

சிதம்பரம் கோட்டத்தில், துணை காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று காவல்துறையினரும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா். கடலுாா் மாவட... மேலும் பார்க்க

பண்ருட்டி பகுதியில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

கடலூா் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் அரசின் பல்வேறு திட்டப்பணிகளை விரைந்துப முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா்சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். பண்ருட்டி பகுதியில் பண்ருட்ட... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

சிதம்பரம் நகராட்சி உட்பட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனா். சிதம்பரம் நகராட்சி உட்பட்ட 1,2, 13,14,... மேலும் பார்க்க