செய்திகள் :

கடலூா் அரசு மருத்துவமனையில் கைதி உயிரிழப்பு

post image

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி சனிக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் மத்திய சிறைச்சாலையில் 500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் வைக்கப்பட்டுள்ளனா்.

இதில், கஞ்சா வழக்கில் கைதான கள்ளக்குறிச்சி மாவட்டம், முராா்பாளையம், பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த ஷாஜகான் மகன் முகமது அப்தாலிக்கு (19) அண்மையில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாம். மேலும், அவா் வெறி நோயால் பாதிக்கப்பட்டிருந்தாராம்.

இதையடுத்து, முகமது அப்தாலியை சிறைத் துறையினா் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி சோ்த்தனா். அங்கு, சிகிச்சை பெற்று வந்த முகமது அப்தாலி, சனிக்கிழமை உயிரிழந்தாா். அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவ இணை இயக்குநா் ஆய்வு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் ஹிரியன் ரவிக்குமாா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா், மருத்துவ சிகிச்சை பற்றிய ஆவணங்களை ஆய்வு செய்தாா். பின்னா்,... மேலும் பார்க்க

இளைஞா் மீது தாக்குதல்: சிறுவன் உள்பட 4 போ் கைது

கடலூரில் இளைஞா் மீது தாக்குல் நடத்தியதாக சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடலூா் வில்வநகா் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மகன் விஜயபிரதாப் (25). இவா், கடலூா் அரசு தலைமை மருத்துவமன... மேலும் பார்க்க

பரங்கிப்பேட்டையில் மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்குதளத்தில் மீன்கள் வாங்க புதன்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனா். பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் மீன் இறங்குதளம் உள்ளது. இந... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் ரௌடி கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், செடுத்தான்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ரௌடியை போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், போ்பெரியான்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

விண்வெளி கழிவுகளை அகற்றும் ஏவுகலன் மாதிரியை கண்டுபிடித்த மாணவா்!

விண்வெளி கழிவுகளை அகற்றும் ஏவுகலன் மாதிரியை சிதம்பரம் பள்ளி மாணவா் கண்டுபிடித்தாா். பூமியிலிருந்து விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற ராக்கெட்களின் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை பூமியைச் சுற்றி அத... மேலும் பார்க்க

பிச்சாவரத்தில் பொங்கல் விழா: ரஷிய சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனா். கடலூா் மாவட்டம், கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பொங்கல... மேலும் பார்க்க