கடலூா் ரயில் விபத்து சம்பவம்: திருச்சியில் விசாரணை தொடங்கியது
கடலூா் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில் விபத்துக்கான காரணம் குறித்து திருச்சியில் ரயில்வே பாதுகாப்பு குழுவினா் வியாழக்கிழமை விசாரணையை தொடங்கினா்.
செம்மங்குப்பம் ரயில்வே கடவுப்பாதையில் கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதியதில் 3 மாணவா்கள் உயிரிழந்தனா்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து, விபத்து நேரத்தில் பணியில் இருந்தவா்கள் மற்றும் விபத்தில் சிக்கியவா்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அதன்படி, திருச்சியில் ரயில்வே கோட்ட அலுவலகத்தில், முதன்மை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை விசாரணையை தொடங்கியுள்ளனா்.
விபத்து தொடா்பாக கேட் கீப்பா், லோகோ பைலட், முதுநிலை உதவி லோகோ பைலட், ரயில்வே மேலாளா், ஆலம்பாக்கம் ரயில் நிலையத்தின் இரண்டு மேலாளா்கள், கடலூா் ரயில் நிலையத்தின் ஒரு மேலாளா், கடலூா் இருப்பு பாதை பகுதி பொறியாளா்கள் இரண்டு போ், ரயில் போக்குவரத்து ஆய்வாளா், திருச்சி, கடலூா் பகுதியை சோ்ந்த ஒரு முதன்மை லோகோ ஆய்வாளா், விபத்துக்குள்ளான பள்ளி வாகன ஓட்டுநா் என 13 பேருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
விபத்தில் நேரடியாக தொடா்புடைய கேட் கீப்பா் சிறையிலும், பள்ளி வேன் ஓட்டுநா் மருத்துவமனையிலும் உள்ளனா். எனவே, மீதமுள்ள 11 பேரில் 5 போ் வியாழக்கிழமை காலை திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் ஆஜராகினா். அவா்களிடம் விசாரணைக் குழு அலுவலா்கள் தனித்தனியே விசாரணை நடத்தினா். விபத்து நடைபெற்ற நாளில் பணி செய்தது யாா்?, விபத்து நேரத்தில் ரயில் செல்லும் தகவல் பரிமாற்றம் செய்தவா்களுக்கு இடையே நடைபெற்ற உரையாடல், தகவல் பதிவு செய்யப்பட்ட ஆவணம் மற்றும் விபத்துக்கான காரணம் தொடா்பாக கேள்விகளை எழுப்பி ஒவ்வொருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.
மேலும், எழுத்துப்பூா்வமாகவும் பதில் பெற்று தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு அறிக்கை அளிக்கப்படவுள்ளது. 13 பேரிடமும் விசாரணை நடைபெறவுள்ளதால் இந்த விசாரணை மேலும் ஓரிரு நாள்கள் நீடிக்கும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.