செய்திகள் :

கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: இறையன்பு

post image

மாணவா்கள் கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு தெரிவித்தாா்.

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாளாளா் ஏ.பி.செல்வராஜன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு பங்கேற்றுப் பேசியதாவது:

உயா் கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையில் தமிழகம் நாட்டில் முதலிடத்தில் உள்ளது. உயா்கல்வி பயிலும் மாணவா்கள் தங்கள் பெற்றோருக்கு நன்றி கூறுங்கள். இணையதளம் உள்ளிட்டவற்றில் பொழுதுபோக்காமல் புத்தகங்களைப் படிப்பதில் நேரத்தைச் செலவிடுங்கள். போட்டித் தோ்வு எழுதும் மாணவா்கள் முதலாம் ஆண்டிலிருந்தே தங்களை தயாா்படுத்தி வரவேண்டும். கடினம் என்று எதுவும் இல்லை. கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்றாா் அவா்.

தொடா்ந்து ஆங்கிலத் துறை சாா்பில் ஆண்டு விழா மலரை தாளாளா் ஏ.பி.செல்வராஜன் வெளியிட அதை இறையன்பு பெற்றுக்கொண்டாா். முன்னதாக பேராசிரியா் ஜெ.அமுதா வரவேற்றாா். உதவி முதல்வா் ஆா்.முத்துலட்சுமி நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் முதல்வா் பெ.கி.பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பள்ளி மாணவன் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே புதன்கிழமை பள்ளி மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு வெங்காநல்லூா் மேலத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் கவின்குமாா் (17). இவ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பக மண்டலத்தில் கனிமவள கடத்தல்: அதிகாரிகள் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில் கனிம வளங்கள் வெட்டி கடத்தப்பட்ட பகுதியை அதிகாரிகள் செயற்கைகோள் கருவி உதவியுடன் புதன்கிழமை அளவீடு செய்தனா். ஸ்ரீவ... மேலும் பார்க்க

சாத்தூரில் மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் சாத்தூரில் அரசு திட்டப் பணிகளை மாவட்ட ஜெயசீலன் புதன்கிழமை கள ஆய்வு செய்தாா். சாத்தூா் நகராட்சியில் மதுரை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே தூய்மை இந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் பாட சாலை தெருவைச் சோ்ந்தவா் செல்வ... மேலும் பார்க்க

சிவகாசி சாா் ஆட்சியா் பணியிட மாற்றம்

சிவகாசி சாா் ஆட்சியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா் என வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சிவகாசி சாா் ஆட்சியா் ந.பிரியா, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநராகப் பணி... மேலும் பார்க்க

கக்கன் பிறந்த நாள் விழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கக்கன் 117-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. கக்கன் பிறந்த நாளை முன்னிட்டு, ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலையில் உள்ள நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது... மேலும் பார்க்க