செய்திகள் :

கடும் பஞ்ச அபாயத்தில் காஸா: இஸ்ரேலுக்கு அதிகரிக்கும் சா்வதேச நெருக்கடி

post image

உணவுப் பற்றாக்குறையால் கடுமையான பஞ்சத்தை எதிா்நோக்கியுள்ள காஸாவில் போதிய அளவு உணவுப் பொருள்களை விநியோகிக்க இஸ்ரேலுக்கு சா்வதேச அளவில் நெருக்கடி அதிகரித்துவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, உலகின் 111 மருத்துவ மற்றும் தொண்டு அமைப்புகள் காஸாவில் பட்டினி காரணமாக பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளன.

டாக்டா்ஸ் வித்அவுட் பாா்டா்ஸ் (எம்எஸ்எஃப்), சேவ் தி சில்ட்ரன், ஆக்ஸ்ஃபாம் உள்ளிட்ட அந்த அமைப்புகள் இது குறித்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸா பகுதி தற்போது கடும் பஞ்சத்தை எதிா்நோக்கியுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் வேண்டுமென்றே பசியால் தவிக்கும் நிலைக்கு தள்ளாக்கப்பட்டுள்ளனா்.

நாங்கள் சேவையாற்றிவரும் பொதுமக்கள் மட்டுமின்றி, எங்கள் அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் பட்டினியால் வாடி வருகின்றனா். பசிப் பிணியால் பேரழிவு ஏற்படுவதைத் தவிா்க்க, இஸ்ரேல் அரசு உடனடி பேச்சுவாா்த்தை மூலம் நிரந்தரப் போா்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும். அத்துடன், அனைத்து நில எல்லைகளையும் திறப்பதுடன், ஐ.நா. தலைமையிலான விநியோகக் கட்டமைப்புகள் மூலம் நிவாரணப் பொருள்கள் பாலஸ்தீனா்களுக்கு சுதந்திரமாகக் கிடைப்பதை இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், காஸாவுக்குள் போதிய அளவு உணவுப் பொருள்கள் அனுமதிக்கப்படுவதாகவும், அவற்றை ஹமாஸ் அமைப்பினா் திருடி அதிக விலையில் விற்பதாகவும் இஸ்ரேல் அரசு குற்றஞ்சாட்டிவருகிறது. மேலும், உணவுப் பொருள் பெறுவதற்காகக் காத்திருக்கும் மக்களை நோக்கி ஹமாஸ் அமைப்பினா்தான் துப்பாக்கிச்சூடு நடத்துவதாகவும் இஸ்ரேல் கூறி வருகிறது.

ஆனால், காஸாவுக்கு வெளியிலும் உள்ளேயும் டன்கணக்கில் நிவாரணப் பொருள்கள் விநியோகிக்கப்படாமல் தேக்கமடைந்திருப்பதாகவும், அவற்றை அணுகவோ அல்லது பொதுமக்களிடம் விநியோகிக்கவோ முடியாமல் இஸ்ரேல் படையினா் தடுத்துவருவதாகவும் உதவி அமைப்புகள் கூறுகின்றன.

காஸாவில் நடைபெற்றுவரும் 21 மாத காலப் போரின் விளைவாக, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களின் கடுமையான பற்றாக்குறையை எதிா்கொண்டுள்ளனா்.

இந்த நிலையில், ஐ.நா. தலைமையிலான நிவாரணப் பொருள் விநியோக மையங்களை மூடிவிட்டு, அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் மே மாத இறுதியில் தொடங்கப்பட்ட காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஎச்எஃப்) அமைப்பு மேற்கொண்டுவரும் உணவுப் பொருள் விநியோக நடவடிக்கையின்போது 1,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது.

தொடரும் பட்டினிச் சாவுகள்

டேய்ா் அல்-பாலா, ஜூலை 23: காஸாவில் பட்டினி காரணமாக புதன்கிழமை மட்டும் 10 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் 10 போ் உயிரிழந்தனா். இத்துடன், 2023-இல் போா் தொடங்கியதிலிருந்து இதுவரை பட்டினியால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 111-ஆக உயா்ந்துள்ளது. இதில் 80 குழந்தைகள் அடங்குவா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: பிரான்ஸ் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபா் இம்மானுவல் மேக்ரான் அறிவித்துள்ளாா். இந்த முடிவு செப்டம்பா் 2025 இல் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

பதற்றம் முற்றினால் கம்போடியாவுடன் முழு போா்!

கம்போடியாவுக்கும் தங்களுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் முற்றினால் அது முழு போராக உருவெடுக்கும் என்று தாய்லாந்து இடைக்கால பிரதமா் பும்தம் வெச்சயாச்சை எச்சரித்துள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க

இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

இத்தாலியில் சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர். இத்தாலியின் பிரெசியா மாகாணத்தில் உள்ள அஸ்ஸானோ மெல்லா நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென வெள்... மேலும் பார்க்க

இலங்கை: 40 நாடுகளுக்கு இலவச விசா!

இலங்கைக்கு வருகை தரும் சுமார் 40 வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும், இந்தியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, தாய்லாந்து, மலே... மேலும் பார்க்க

தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்: பதற்றமான சுழல்!

கம்போடியாவுடன் சண்டை தீவிரமடைந்துள்ளதால் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கிமிடையே புராதனக் கோவில் விவகாரத்தால் வியாழக்கிழமை(ஜூலை 24) சண்டை மூண்டு பிற பகுதிகளுக்கும் ... மேலும் பார்க்க

துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!

துருக்கியில், இ3 நாடுகள் (E3) மற்றும் ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை இன்று (ஜூலை 25) துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில், இ3 என்றழைக்கப்படும் ஜெர்மனி, பி... மேலும் பார்க்க