செய்திகள் :

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

post image

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

கடைசி நாளில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. கைவம் 4 விக்கெட்டுகள் இருந்தும், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இங்கிலாந்து பயந்துவிட்டது

டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என சமன்செய்த நிலையில், ஓவல் டெஸ்ட்டின் கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

michael vaugan
மைக்கேல் வாகன் (கோப்புப் படம்)

இது தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்திருந்தால், கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கும். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு அவர் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியிருப்பார். ஓவல் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அச்சமடைந்துவிட்டது.

இங்கிலாந்து அணிக்கு ஒரே ஒரு பார்ட்னர்ஷிப் மட்டுமே தேவைப்பட்டது. பயத்தினால் அதிரடியாக விளையாட முயன்று தோல்வியடைந்துவிட்டனர். ஹாரி ப்ரூக்கின் விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய சவாலானதாக அமைந்தது என்றார்.

இதையும் படிக்க: பும்ரா இருந்திருந்தால் வெற்றி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்: முகமது சிராஜ்

The former captain of the England team has said that the team was panic on the final day of the final Test against India.

நான் பார்த்த மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான்: இங்கிலாந்து பயிற்சியாளர்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடை... மேலும் பார்க்க

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முடியாதது ஏமாற்றமளித்தாலும், நியாயமான முடிவே கிடைத்துள்ளதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இட... மேலும் பார்க்க

இந்திய அணியின் த்ரில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள்... மேலும் பார்க்க

சிராஜ்: இந்திய கிரிக்கெட்டின் அகராதியிலிருந்து மறையும் பணிச்சுமை!

பணிச்சுமை குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், “சிராஜ் பந்துவீச்சினால் இனிமேலாவது இந்த வார்த்தை இந்திய கிரிக்கெட்டின் அகராதியிலிருந்து மறையுமென நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். ஆண்டர்சன் - ... மேலும் பார்க்க

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

தெலங்கானா காவல்துறை இந்திய வீரர் முகமது சிராஜ் குறித்து நெகிழ்ச்சியாக வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹைதராபாதைச் சேர்ந்த முகமது சிராஜ் (31 வயது) இந்திய டெஸ்ட் அணிக்காக 2020 ... மேலும் பார்க்க

பும்ரா இருந்திருந்தால் வெற்றி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்: முகமது சிராஜ்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிக... மேலும் பார்க்க