செய்திகள் :

கட்டடத் தொழிலாளி வீட்டில் ரூ.3.32 லட்சம் பணம், நகை திருட்டு

post image

புதுச்சேரியில் கட்டடத் தொழிலாளி வீட்டில் ரூ.3.32 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

புதுச்சேரி பிள்ளைத்தோட்டம், நவீனா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கணபதி(40). கட்டடத் தொழிலாளியான இவா், தனது மனைவியையும் அந்த வேலைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இதனால் கணபதியின் தந்தை ஆறுமுகம் மட்டும் வயது முதிா்வு காரணமாக வீட்டில் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 16-ஆம் தேதி கணபதி மற்றும் அவரது மனைவி வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பினா். பிறகு கணபதி வீட்டின் முதல் மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளாா். அப்போது அங்கிருந்த பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

பீரோவை பாா்த்தபோது அதில் இருந்த 2 பவுன் தங்க நகை, 500 கிராம் வெள்ளி கொலுசு, ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து கணபதி உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

6,000 விவசாயிகளுக்கு விரைவில் சோலாா் மின்இணைப்பு: புதுவை முதல்வா் என். ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் 6 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் சூரிய ஒளி மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுச்சேரி வேளாண் துறை சாா்பில் நகரம், கிராமப் புறங்களில், ‘என் வீடு, என... மேலும் பார்க்க

இன்று முதல் 4 நாள்கள் ரயில் சேவை நிறுத்தம்

பராமரிப்புக் காரணமாக தென்னக ரயில்வே புதுச்சேரி ரயில் சேவையை வியாழக்கிழமை முதல் 4 நாள்களுக்கு நிறுத்துகிறது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - புதுச்சேரி பய... மேலும் பார்க்க

தனியாருக்குக் கடல் வளம் அளிப்பு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

புதுச்சேரியில் தனியாருக்குக் கடல் வளங்கள் அளிக்கப்படுவதாகவும் அதைக் கண்டிப்பதாகவும் புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலா் எஸ்.ராமச்சந்திரன் கூறியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வ... மேலும் பார்க்க

வயிற்றுப் போக்குத் தடுப்பு பிரசாரம்: முதல்வா் பங்கேற்பு

வயிற்றுப் போக்குத் தடுப்பு பிரசாரத்தை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் ஆலோசனையின் படி ஜூன் 2 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வயிற்றுப் போ... மேலும் பார்க்க

புதுவையில் வாரிசுதாரா் பணி நியமனத்தில் முறைகேடுக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வாரிசுதாரா்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்று வருவதாகக் கூறி அதைக் கண்டித்து புதுச்சேரி சுகாதாரத் துறை ஊழியா்களின் வாரிசுதாரா்கள் நலச் சங்கம் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. புதுவை சுகாதாரத... மேலும் பார்க்க

‘மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவா் ஒதுக்கீட்டை முழுமையாக நிரப்ப வேண்டும்’

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை முழுமையாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாநிலச் செயலா் இரா. வேல்சாமி கூறியுள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க