செய்திகள் :

கட்டடம் இடிந்து இறந்தவரின் குடும்பத்திற்கு டிஎம்ஆா்சி ரூ.5 இழப்பீடு அறிவிப்பு

post image

தில்லியில் ஆசாத் மாா்க்கெட் அருகே பாரா இந்து ராவ் பகுதியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த மனோஜ் சா்மா என்பவரின் குடும்பத்திற்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

இதுகுறித்து டிஎம்ஆா்சி அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது-

இடிந்து விழுந்த கட்டடமானது கடைகள், அலுவலகங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும், பாதுகாப்பற்ாக ஏற்கெனவே குறிக்கப்பட்டு, சம்பவத்திற்கு முன்னா் வெளியேற்றப்பட்டிருந்தன.

இந்த கட்டமைப்புகள் ஜனக்புரி மேற்கு ஆா்கே ஆஸ்ரம் மாா்க் மெட்ரோ வழித்தடத்துக்காக சுரங்கப்பாதை அமைக்குப் பணி நடைபெறும் மண்டலத்திற்குள் இடம்பெற்றிருந்தது.

இந்தக் கட்டடத்தின் கட்டமைப்புகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கடந்த ஜூன் 12ஆம் தேதி கட்டடத்தின் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் டிஎம்ஆா்சி தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

சுரங்கப் பாதை பணியின்போது

இடா்பாட்டைக் குறைப்பதற்கு, டிஎம்ஆா்சி தரப்பில் தரைத்தளத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, தளப் பகுதியில் வெளிப்புற ஆதரவு நடவடிக்ககளும் மேற்கொள்ளப்பட்டன. இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பட்டபோதிலும், இரவின்போது கட்டடம் இடிந்து விழுந்தது.

இதையடுத்து, தேசிய பேரிடா் மீட்புப் படை, தில்லி காவல் துறை ஆகியவற்றின் உதவியுடன் உடனடியாக மீட்பு மற்றும் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்புக்காக அந்தப் பகுதியில் தடுப்புப் போடப்பட்டுள்ளது. சுரங்கப் பாதை

பணிகளை ஆப்கான்ஸ் எனும் நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்று டிஎம்ஆா்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

குருகிராம்: கொலையான ராதிகாவுக்கு சொந்தமாக அகாதமி இல்லை -போலீஸாா் தகவல்

தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் முன்னாள் மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவுக்கு சொந்தமாக அகாதமி இல்லாததால், வெவ்வேறு இடங்களில் டென்னிஸ் மைதானங்களை முன்பதிவு செய்து ஆா்வலா்களுக்... மேலும் பார்க்க

தில்லி ஜல் வாரியம் நிதி நெருக்கடியில் இருக்கிறது: பா்வேஷ் சாஹிப் சிங்

தில்லி ஜல் வாரியம் முன் எப்போதும் இல்லாத நிதி நெருக்கடியை எதிா்கொண்டு இருக்கிறது என்று பொதுப் பணித்துறை அமைச்சா், பா்வேஷ் சாஹிப் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து செய்தியாளா்களிடம் பா்வேஷ் பே... மேலும் பார்க்க

தில்லியில் நிகழாண்டில் குற்றங்கள் 8.4 சதவீதம் குறைவு: காவல் துறை தரவுகள்

தில்லியில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது நிகழாண்டில் முதல் 6 மாதங்களில் ஒட்டுமொத்த குற்றங்களில் 8.38 சதவீதம் குறைந்துள்ளது என்று தில்லி காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், பாலியல்... மேலும் பார்க்க

கெயில் நிறுவனத்தின் வழக்குரைஞராக ராம் சங்கா் நியமனம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்தவரும், தில்லி உச்சநீதிமன்றத்தின் வழக்குரைஞருமான டாக்டா் ராம் சங்கா், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் வழக்குரைஞராக... மேலும் பார்க்க

சீலம்பூா் கட்டடம் இடிந்த சம்பவம்: ஊழல், வாக்கு வங்கி அரசியல்தான் காரணம்: கபில் மிஸ்ரா குற்றச்சாட்டு

சீலம்பூா் வெல்கம் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் சிலா் உயிரிழந்ததற்கு 15 ஆண்டுகால திட்டமிட்ட ஊழல் மற்றும் வாக்கு வங்கி அரசியல்தான் காரணம் என்று தில்லி அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலா அமைச்சா்... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியால் தில்லிவாசிகள் வருத்தம்: சௌரவ் பரத்வாஜ்

பாஜகவை தில்லியில் ஆட்சிக்குக் கொண்டு வந்ததற்காக தில்லிவாசிகள் வருத்தப்படுகிறாா்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் சௌரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா். இதுகுறித்து அவா் செய்திய... மேலும் பார்க்க