செய்திகள் :

கட்டட மேற்பாா்வையாளரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை

post image

கட்டட மேற்பாா்வையாளரைக் கொலை செய்த தச்சுத் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகேயுள்ள புது பையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் காளிதாஸ் என்ற சதாசிவம் (47). இவா் கட்டட மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

தேவகோட்டை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த நாகராஜுக்கு(40), தச்சு வேலை செய்ததற்கான கூலியை சதாசிவம் வழங்கவில்லையாம்.

இதுதொடா்பாக தேவகோட்டை கடந்த 3.6.2026-இல் ஏற்பட்ட தகராறின் போது, நாகராஜும், இவரது சகோதரா் கருப்பையாவும் (43) சோ்ந்து சதாசிவத்தை கத்தியால் குத்திக் கொலை செய்தனா்.

இதுகுறித்து தேவகோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட கருப்பையா உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் நாகராஜுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி கே.அறிவொளி புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

அரளிப்பாறையில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள அரளிப்பாறையில் புதன்கிழமை மஞ்சு விரட்டு நடைபெற்றது. அரளிப்பாறையில் சிறிய குன்றின் மீது குன்றக்குடி ஆதீன மடத்துக்குள்பட்ட பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் அமைந... மேலும் பார்க்க

நாட்டரசன்கோட்டை சிவன்கோயில் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை சிவகாமி அம்மன் உடனுறை கரிகால சோழீஸ்வரா் கோயில் மாசித் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயில் மாசித் திருவிழா கடந்த 3-ஆம் தேதி... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கையிலுள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள இரு உறுப்பினா்கள் பணியிடத்துக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபத... மேலும் பார்க்க

மாணிக்கவள்ளி அம்மன் கோயில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்துக்குள்பட்ட மாதாபுரம் மாணிக்கவள்ளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலை இதே கிராமத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்களான மாணிக்கம், சுரேஷ், ... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சிவகங்கை அரண்மனைவாசலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ம... மேலும் பார்க்க

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சிவகங்கை ராமச்சந்திரனாா் பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ... மேலும் பார்க்க