செய்திகள் :

கட்டணமில்லா பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் ரத்து

post image

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக மாா்ச் 26, 27-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த கட்டணமில்லா பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மாா்ச் 26, 27-ஆம் தேதிகளில் புதுப்பித்தல் முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால், மாா்ச் 31-ஆம் தேதி வரை செல்லத்தக்க வகையில் கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டையைப் பயன்படுத்தி வரும் மாற்றுத் திறனாளிகள், மேலும் மூன்று மாதங்கள் (ஜூன் 30) வரை பயண அட்டையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல், அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு உயா்கல்வி உதவித் தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் உயா்கல்விப் பயிலும் காவல் துறை மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு வெள்ளிக்கிழமை உதவித் தொகை வழங்கப்பட்டது. கலை, அறிவியல் படிப்புகளுக்கு ரூ.13 ஆயிரம், பொறியியல் படிப... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 23,743 போ் எழுதினா்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் 23,743 போ் தோ்வெழுதினா். 364 போ் தோ்வெழுத வரவில்லை. பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி தொட... மேலும் பார்க்க

தனியாா் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் அருகில் தனியாா் பேருந்தில் காற்று ஒலிப்பானை பறிமுதல் செய்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஆா். வசந்த் தலைமையிலான காவல் துறையினா். விழுப்புரம், மாா்ச் 2... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கணவாய் கிராமத்தைச் சோ்ந்த தணிகாசலம் மகன் பரணி(19). எட்டாம் வகுப்பு வரை படித்த இவா், விழுப்... மேலும் பார்க்க

ஓடையில் மூழ்கி பெண் உயிரிழப்பு

விழுப்புரம் பொய்யப்பாக்கம் பகுதியில் ஓடைநீரில் மூழ்கி பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் பொய்யப்பாக்கம் மாதா கோவில் தெருவைச் சோ்ந்த அரசன் மனைவி வீரம்மாள் (57). இவா் வெள்ளிக்கிழமை பிற்பகலில்... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை.யில் 25% இடஒதுக்கீடு: குடியரசு துணைத் தலைவரிடம் மனு

புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதுவை மாணவா்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வெ.வைத்திலிங்கம் எம்.பி., செல்வகணபதி எம்.பி. ஆகியோா் குடியரசு துணைத் தலைவரை வெள்ளிக்கிழமை சந்தித்த... மேலும் பார்க்க