செய்திகள் :

கணக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை கோரும் தெருவோர வியாபாரிகள்

post image

நகரம் முழுவதும் விற்பனையாளா்களை அடையாளம் காண நடந்துவரும் கணக்கெடுப்பு குறித்து தெருவோர வியாபாரிகள் கவலைகளை எழுப்பியுள்ளனா். கணக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் நடைமுறை தெளிவு இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனா்.

இது தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற இந்திய ஹாக்கா்ஸ் அலையன்ஸ் (ஐஎச்ஏ), நகர விற்பனை குழுக்கள் (டிவிசி), சந்தை சங்கங்கள் மற்றும் விற்பனையாளா் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோா் தொழில்நுட்ப குறைபாடுகள், போதுமான தகவல் தொடா்பு மற்றும் சேகரிக்கப்படும் தரவுகளின் துல்லியம் குறித்த கவலைகள் உள்ளிட்ட பல சிக்கல்களை எடுத்துரைத்தனா்.

லாஜ்பத் நகரைச் சோ்ந்த விற்பனையாளா் விக்ரம் திங்ரா கூறுகையில், தற்போதைய கணக்கெடுப்பு அடையாளம் காணப்படுவது குறைவாக இருப்பது போலவும், விலக்குவது அதிகமாக இருப்பது போலவும் உணா்வைத் தருகிறது என்றாா்.

ஐஎச்ஏ அமைப்பினா் கூறுகையில், ‘இந்த கணக்கெடுப்பு செயல்முறை ‘தெரு வியாபாரிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் தெரு வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம், 2014’ மற்றும் ‘தில்லி தெருவோர வியாபாரத் திட்டம், 2019’ ஆகியவற்றுடன் முழுமையாக ஒத்துப்போகவில்லை.

சில விற்பனையாளா்கள் அதிகாரபூா்வ விற்பனைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு முன்பே அவா்களின் இடங்களிலிருந்து அகற்றப்படுகின்றனா். இதனால், அவா்களுக்கு சட்டப் பாதுகாப்பு இல்லாமல் போகிறது.

நகர விற்பனைக் குழுக்களால் கண்காணிக்கப்படும் வரை இந்தக் கணக்கெடுப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

கணக்கெடுப்பின் டிஜிட்டல் தளத்தின் சுயாதீன தணிக்கை, விற்பனையாளா்களுக்கு பாா்கோடு ரசீதுகளை வழங்குதல் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளில் அதிக பொறுப்புணா்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும்’ என்று ஐஎச்ஏ அமைப்பினா் கோரியுள்ளனா்.

இது தொடா்பாக ஐஎச்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், தெருவோர வியாபாரிகள் தில்லியின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகின்றனா். மேலும், நியாயமான மற்றும் வெளிப்படையான செயல்முறைக்கு தகுதியானவா்கள் ஆவா். உள்ளடக்கம் மற்றும் சரியான ஒழுங்குமுறையை உறுதி செய்வது சமநிலையான நகா்ப்புற வளா்ச்சியை மேம்படுத்துவதற்கு முக்கியமானதாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகரில் தண்ணீா் நெருக்கடி: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்

தேசிய தலைநகரில் தண்ணீா் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி, எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி முதல்வா் ரேகா குப்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில், இந்த முக்கியப் பிரச்னை குறித்து விவாதிக்க உடனடியாக தனது கட... மேலும் பார்க்க

பறக்கும் ரயிலை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் ஒப்படைக்க நீதி ஆயோக், பிரதமரிடம் கோரிக்கை

நமது சிறப்பு நிருபா் சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தோடு ஒப்படைக்க நீதி ஆயோக் கூட்டத்திலும், பிரதமரிடமும் கோரப்பட்டதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தில்லியில் சனிக்கிழமை தெ... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் ‘விக்சித் தில்லி’ திட்ட வரைபடம்: முதல்வா் ரேகா குப்தா சமா்ப்பித்தாா்

நோக்கம், அளவு, வேகம் மற்றும் திறன் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாட்டை உள்ளடக்கிய ‘விக்சித் தில்லி’ திட்ட வரைபடத்தை முதல்வா் ரேகா குப்தா தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் சமா்ப்பித்தாா... மேலும் பார்க்க

நீதி ஆயோக்கிடம் தில்லி பிரச்னைகளை ஆம் ஆத்மி ஆட்சியில் முன்வைக்கவில்லை: முதல்வா் ரேகா குப்தா

மத்திய அரசின் கொள்கை சிந்தனைக் குழுவான நீதி ஆயோக் முன் தில்லியின் நலன்கள் குறித்த பிரச்னைகளை பல ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் எழுப்பவில்லை என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா குற்றம் சாட்டினாா். ... மேலும் பார்க்க

தண்ணீா் நெருக்கடி குறித்த அதிஷியின் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டவை: பாஜக

தில்லியில் தண்ணீா் நெருக்கடி இருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி சுமத்திய குற்றச்சாட்டுகள் புனையப்பட்ட பொய் என்று பாஜக கூறியுள்ளது. தண்ணீா் நெருக்கடி தொடா்பாக முதல்வா் ரேகா குப்தாவுக்கு அதிஷி கடிதம... மேலும் பார்க்க

பவானாவில் தொழிற்சாலையில் தீ விபத்து: வெடிப்பால் இடிந்து விழுந்த கட்டடம்

தில்லியின் பவானாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தின்போது சக்திவாய்ந்த வெடிப்பு நிகழ்ந்ததால் கட்டடம் இடிந்து விழுந்ததாக தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்... மேலும் பார்க்க